(ஆசிரியர் தம் ஓய்வறையில் அமர்ந்திருக்கிறார். மணி அவ்அறையின் வாயிலில் நின்று குரல் கொடுக்கிறான்)
மணி |
: ஐயா, வணக்கம். உள்ளே வரலாமா? |
வள்ளியின் |
: யாரது? |
மணி |
: நான்தான் தங்களது மாணவன் மணி. |
வள்ளியின் |
: மணியா, எந்த மணி? |
மணி |
: பதினொன்றாம் வகுப்பு ஆ பிரிவில் படிப்பவன். . .? |
வள்ளியின் |
: பதினொன்றாம் வகுப்பு ஆ பிரிவு மாணவன் . . . மணி (நினைவுக்கு வராமல் சற்றே தயங்கியபடி இழுக்கிறார்). |
மணி |
: ஐயா, எல்லாரும் குள்ளமணி என்று கூப்பிடுவார்களே . . . அந்த மணி (குரல் வருத்தத்தில் குறைந்து ஒலிக்கிறது) |
வள்ளியின் |
: ஓ... (நினைவுக்கு வந்தவராய்) உள்ளே வா, மணி. |
மணி |
: (வந்து கொண்டே) நன்றி. (உள் நுழைந்து ஆசிரியரைக் கண்டு பணிவுடன்) வணக்கம் ஐயா. |
வள்ளியின் |
: ஓ. . . மணியா, இப்போது நினைவுக்கு வருகிறது. என்ன செய்தி மணி? |
மணி |
: (தயங்கியபடி) ஐயா, நேற்று, நான் பள்ளிக்கு வரவில்லை... |
வள்ளியின் |
: அதுதான் தெரியுமே. உடல் நலக்குறைவு என்று விடுப்புக் கடிதம் கொடுத்திருந்தாயே. |
மணி |
: ஆமாம். ஐயா. |
வள்ளியின் |
: அப்புறம் என்ன? பாடத்தில் ஏதேனும் ஐயமா? |
மணி |
: இல்லை ஐயா. |
வள்ளியின் |
: பிறகு..? |
மணி |
: (மீண்டும் தயக்கத்துடன்) ஐயா, நேற்று வகுப்பில் ஒரு சுற்றறிக்கை வந்திருக்கிறது. மாநில அளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி.. . . . |
வள்ளியின் |
: ஆமாம். “மனத்தில் உறுதி வேண்டும்.” என்ற தலைப்பில் பேச வேண்டும் என்று. முதல் பரிசு கூட பத்தாயிரம் உருபா அல்லவா? |
மணி |
: ஆமாம். ஐயா |
வள்ளியின் |
: நல்லது. நீ கூட கலந்து கொள்கிறாய் அல்லவா? உன் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறதே? நான் பார்த்தேனே... |
மணி |
: ஆமாம். |
வள்ளியின் |
: வாழ்த்துகள். நன்றாகப் பேசி முதல் பரிசினைப் பெற்றுப் பள்ளிக்குப் பெருமை சேர்க்க வேண்டும். |
மணி |
: ஐயா, வந்து (தயக்கத்துடன்) அந்தப் போட்டியில். . . |
வள்ளியின் |
: கலந்து கொள்வதற்குக் கருத்துகள் வேண்டுமா? |
மணி |
: (அவசரமாக மறுத்துத் தலையை ஆட்டியபடி) இல்லை ஐயா. அந்தப் போட்டியில் நான் கலந்து கொள்ளவில்லை. அந்தப் பட்டியலில் என் பெயரை நீக்க வேண்டுகிறேன். |
வள்ளியின் |
: ஏன்? மறுபடியும் உடல் நலமில்லையா? போட்டி நாளை மறுநாள் தானே? |
மணி |
: ஆமாம் ஐயா. ஆனால் என்னால் கலந்து கொள்ள...(தயங்குகின்றான்) |
வள்ளியின் |
: ஏன்? |
மணி |
: ஐயா, அது வந்து (தயக்கத்துடன்) வேண்டாம் ஐயா. |
வள்ளியின் |
: அதுதான் என்ன காரணம்? |
மணி |
: (குனிந்த தலையுடன்) எல்லாரும் கேலி செய்கிறார்கள். |
வள்ளியின் |
: என்னவென்று? |
மணி |
: குள்ளன் குள்ளன் என்று. . . |
வள்ளியின் |
: யார்? |
மணி |
: எல்லாரும் ஐயா, குறிப்பாக நமது வகுப்புத் தோழர்கள். |
வள்ளியின் |
: நான் பார்த்துக்கொள்கிறேன். அதற்காக நீ போட்டியில் கலந்து கொள்ள ஏன் தயங்குகிறாய்? |
மணி |
: ஒலிபெருக்கி உயரம் கூட இல்லை. நீயெல்லாம் பேசிப் பரிசு வாங்கப் போகிறாயா? என்று கேலி செய்கிறார்கள். நான் குள்ளமானவன் தானே ஐயா. அதனால்தானே எல்லாரும் என்னைக் குள்ளமணி என்றே கூப்பிடுகிறார்கள். (வருத்தத்தில் குரல் குன்றி விடுகிறது) |
வள்ளியின் |
: (சிரிக்கிறார்) |
மணி |
: பார்த்தீர்களா, ஐயா. தாங்கள் கூடச் சிரிக்கிறீர்கள்... (அழுகை வந்து விடுகிறது) |
வள்ளியின் |
: இல்லை மணி. உன் உருவு கண்டு நான் நகைக்கவில்லை. உன் அறியாமை கண்டுதான் நான் நகைத்தேன். |
மணி |
: அறியாமையா? |
வள்ளியின் |
: ஆமாம். |
மணி |
: ஒலிபெருக்கி உயரம் கூட இல்லாத நான், - ... |
வள்ளியின் |
: (குறுக்கிட்டுச் சிரித்துக் கொண்டே) பெரிய பேருந்தினை ஓட்டும் ஓட்டுநர் பேருந்து உயரமா இருக்கிறார்? வானூர்தி செலுத்தும் வலவன் (Pilot) வானூர்தியைவிட உயரமாகவா இருக்கிறார்?. |
மணி |
: ஐயா, அது வந்து..? |
வள்ளியின் |
: நீ உயரம் குறைந்திருக்கிறாய் என்று யார் சொன்னது? |
மணி |
: மற்றவர்களைக் காட்டிலும் நான் குள்ளன்தானே. |
வள்ளியின் |
: மணி, உண்மையில் உயரம் வெளியில் தெரியும் தோற்றத்தில் இல்லை. தெரியுமா? |
மணி |
: எப்படி ஐயா? சேர்க்கையின்போது எனது உயரத்தைத் தான் அளந்து குறித்திருக்கிறார்களே..? |
வள்ளியின் |
: அது ஒரு அடையாளம். அதில் உனது உயரம் இவ்வளவு என்றுதானே குறித்தார்கள். நீ குள்ளமானவன் என்றா குறித்தார்கள்?. |
மணி |
: இல்லை ஐயா. |
வள்ளியின் |
: அப்புறம் என்ன? நீ திருக்குறள் படித்திருக்கிறாய் தானே? |
மணி |
: ஆமாம். பாடப்பகுதியில் உள்ள திருக்குறள்களை. . . |
வள்ளியின் |
: திருவள்ளுவர் என்ன சொல்கிறார்? “வெள்ளத்தனைய மலர் நீட்டம்..” |
மணி |
: “மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு”. |
வள்ளியின் |
: சரியாகச் சொன்னாய். இதன் பொருள் என்ன? |
|
 |
மணி |
: வெள்ளத்தின் உயரம் எவ்வளவோ, அவ்வளவு உயரம் அந்த நீர்நிலையில் வளரும் மலரின் நிலையும் உயரமாக இருக்கும் என்று விளக்கம் தந்திருக்கிறீர்கள் ஐயா. |
வள்ளியின் |
: அதுபோல் மனிதனின் உயரம் என்பது . . |
மணி |
: அவர் அவர்தம் உள்ளத்தில் உள்ள எண்ணத்தின் உயர்வைப் பொறுத்து அமைவது ஐயா. |
வள்ளியின் |
: சரியாகச் சொன்னாய் மணி! அப்படியானால் உனது உயரம்... |
மணி |
: மற்றவர்கள் என்னைக் குள்ளன் என்று சொல்கிறார்களே.. |
வள்ளியின் |
: அப்படியானால் அவர்கள் உள்ளத்தால் உயரம் குன்றியவர்கள் என்றுதானே பொருள்... |
மணி |
: (தயங்கியபடி தலைநிமிர்கிறான். சற்றே நம்பிக்கை கண்ணில் தோன்றுகிறது) ஆனாலும். . . |
வள்ளியின் |
: என்ன ஆனாலும். .. |
மணி |
: பேச்சுப் போட்டியில் நான் பங்கேற்க விரும்பவில்லை ஐயா. |
வள்ளியின் |
: ஏன்? |
மணி |
: என்னைவிடப் பெரியவர்கள், கலந்து கொண்டு பேசுவார்களே..? |
வள்ளியின் |
: போட்டி என்றால் பலரும் கலந்து கொள்ளத்தானே செய்வார்கள். நாம் நன்றாகப் பேசத் தயாராகிவிட்டால் மற்றவர்களைப் பற்றி ஏன் கவலைப்படவேண்டும்? |
மணி |
: இல்லை ஐயா. மற்றவர்களைக் காட்டிலும் மிகவும் இளையவனாகத் தெரியும் என் பேச்சை. . .. |
வள்ளியின் |
: புரிகிறது மணி, உனது சிக்கல் இதுதான். நீ மிகவும் இளையவன் என்று கவலைப்படுகிறாய். இல்லையா? |
மணி |
: ஆம், ஐயா. |
வள்ளியின் |
: மணி. உனக்கு நெடுஞ்செழிய மன்னன் கதை தெரியுமா? |
மணி |
: புறநானூறு நடத்துகிறபோது சொன்னீர்களே.. பாண்டியன் நெடுஞ்செழியன் என்று... |
வள்ளியின் |
: ஆமாம். மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னன். மிகச் சிறிய வயதிலேயே மன்னனாகப் பட்டம் ஏற்றவன்.. எவ்வளவு சிறியவன் தெரியுமா? பால் வடியும் முகத்தன். சிறு குழந்தைகள் அணியும் ஐம்படைத் தாலியை இன்னும் அணிந்திருப்பவன்.. அவனது ஆட்சியில் ஒரு நாள்... |