மணி |
: தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வாழ்க! வாழ்க.. ! |
வள்ளியின்.. |
: என்ன மணி.. நீயும் புலவர் ஆகி விட்டாயா? |
மணி |
:ஆ... தாங்கள் கூறிய கதையில் ஒன்றிப்போய்விட்டேன் ஐயா. |
வள்ளியின்.. |
: கதையா? இது என்ன கற்பனை என்றா நினைத்தாய்? வரலாறு. நடந்த நிகழ்வு.. |
மணி |
: வியப்பான வரலாறு ஐயா. |
வள்ளியின்.. |
: வியப்பது மட்டும் நமது வேலை அல்ல. நாமும் இதுபோல் உறுதி கொண்டு செயல்பட வேண்டும், மணி. |
மணி |
: உறுதியாக ஐயா.. ஆனால் |
வள்ளியின்.. |
: என்ன ஆனால்... |
மணி |
: அவரோ மன்னன். நான்... |
வள்ளியின்.. |
: “எல்லாரும் இந்நாட்டு மன்னர் !” என்று பாரதியார் பாடியிருக்கிறாரே.. அப்படியானால் நீயும் இந்நாட்டு மன்னன் தானே.. ! |
மணி |
: ஆமாம் ஐயா. |
வள்ளியின்.. |
: அதனால்தான் சொல்கிறேன் மணி. ஒருவனுக்கு வயதோ தோற்றமோ பெருமை, சிறுமை தந்துவிடுவதில்லை. திறமையும் தகுதியும் இருந்தால்தான் சிறப்பு. அதைவிட இன்றியமையாதது மன உறுதி.. அது வந்துவிட்டால் எதனையும் வெல்லலாம் இல்லையா மணி..? |
மணி |
: உண்மைதான் ஐயா. மனத்தில் உறுதி கொள்கிறேன் ஐயா. |
வள்ளியின்.. |
: மனத்தில் உறுதிவந்தால் வாக்கில் இனிமை வந்துவிடுமல்லவா? வாக்கு இனிமையாகிவிட்டால் பேச்சுப் போட்டியில் வெல்லலாம் அல்லவா. ஆக, பேச்சுப் போட்டியில் பங்கேற்போர் பட்டியலில்... |
மணி |
: என் பெயர் இருக்கட்டும் ஐயா . நெடுஞ்செழியப் பாண்டியன் போல நான் வெற்றி பெறுவது உறுதி ஐயா.. |
வள்ளியின்.. |
: ஆம் மணி. அவன் வில்போரில் வென்றான்.. நீ சொல்போரில் வெற்றி பெறுவாய். என் நல்வாழ்த்துகள். |
மணி |
: நன்றி ஐயா, சென்றுவருகிறேன். (வணங்கி விடை பெறுகிறான்) |