|
6 சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை |
|
|
||
|
[ மணிமேகலைதனக்கு மணிமேகலாதெய்வம் |
|
|
சக்கரவாளக் கோட்டம் உரைத்து அவளை |
|
|
மணிபல்லவத்துக்
கொண்டுபோன பாட்டு
]
|
|
|
||
|
அந்தி மாலை நீங்கிய பின்னர் |
|
|
வந்து தோன்றிய மலர்கதிர் மண்டிலம் |
|
|
சான்றோர் தங்கண் எய்திய குற்றம் |
|
|
தோன்றுவழி விளங்கும் தோற்றம் போல |
|
5
|
மாசுஅறு விசும்பில் மறுநிறம் கிளர |
|
|
||
|
ஆசுஅற விளங்கிய அம்தீம் தண்கதிர் |
|
|
வெள்ளிவெண் குடத்துப் பால்சொரி வதுபோல் |
|
|
கள்அவிழ் பூம்பொழில் இடைஇடை சொரிய, |
உரை |
|
உருவு கொண்ட மின்னே போலத் |
|
10
|
திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள் |
|
|
||
|
ஆதி முதல்வன் அறவாழி ஆள்வோன் |
|
|
பாத பீடிகை பணிந்தனள் ஏத்திப் |
|
|
பதியகத்து உறையும்ஓர் பைந்தொடி ஆகிச் |
|
|
சுதமதி நல்லாள் தன்முகம் நோக்கி |
|
15
|
ஈங்கு நின்றீர் என்உற் றீர்என |
உரை |
|
||
|
ஆங்குஅவள் ஆங்குஅவன் கூறியது உரைத்தலும் |
உரை |
|
அரசிளங் குமரன் ஆயிழை தன்மேல் |
|
|
தணியா நோக்கம் தவிர்ந்திலன் ஆகி |
|
|
அறத்தோர் வனம்என்று அகன்றனன் ஆயினும் |
|
20
|
புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான் |
|
|
||
|
பெருந்தெரு ஒழித்துஇப் பெருவனம் சூழ்ந்த |
|
|
திருந்துஎயில் குடபால் சிறுபுழை போகி |
|
|
மிக்க மாதவர் விரும்பினர் உறையும் |
|
|
சக்கர வாளக் கோட்டம் புக்கால் |
|
25
|
கங்குல் கழியினும் கடுநவை எய்தாது |
|
|
||
|
அங்குநீர் போம்என்று அருந்தெய்வம் உரைப்ப, |
உரை |
|
வஞ்ச விஞ்சையன் மாருத வேகனும் |
|
|
அம்செஞ் சாயல் நீயும் அல்லது |
|
|
நெடுநகர் மருங்கின் உள்ளோர் எல்லாம் |
|
30
|
சுடுகாட்டுக் கோட்டம் என்றுஅலது உரையார் |
|
|
||
|
சக்கர வாளக் கோட்டம் அஃதுஎன, |
|
|
மிக்கோய் கூறிய உரைப்பொருள் அறியேன் |
|
|
ஈங்கு இதன் காரணம் என்னை யோஎன |
உரை |
|
ஆங்குஅதன் காரணம் அறியக் கூறுவன் |
|
35
|
மாதவி மகளொடு வல்இருள் வரினும் |
|
|
||
|
நீகேள் என்றே நேர்இழை கூறும்;இந் |
உரை |
|
நாமப் பேரூர் தன்னொடு தோன்றிய |
|
|
ஈமப் புறங்காடு ஈங்குஇதன் அயலது |
உரை |
|
ஊரா நல்தேர் ஓவியப் படுத்துத் | |
40
|
தேவர் புகுதரூஉம் செழுங்கொடி வாயிலும் |
|
|
||
|
நெல்லும் கரும்பும் நீரும் சோலையும் |
|
|
நல்வழி எழுதிய நலங்கிளர் வாயிலும் |
|
|
வெள்ளி வெண்சுதை இழுகிய மாடத் |
|
|
துள்உரு எழுதா வெள்ளிடை வாயிலும் |
|
45
|
மடித்த செவ்வாய்க் கடுத்த நோக்கின் |
|
|
||
|
தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து |
|
|
நெடுநிலை மண்ணீடு நின்ற வாயிலும் |
|
|
நால்பெரு வாயிலும் பால்பட்டு ஓங்கிய |
|
|
காப்புஉடை இஞ்சிக் கடிவழங்கு ஆர்இடை |
உரை |
50
|
உலையா உள்ளமோடு உயிர்க்கடன் இறுத்தோர் |
|
|
||
|
தலைதூங்கு நெடுமரம் தாழ்ந்துபுறம் சுற்றிப் |
|
|
பீடிகை ஓங்கிய பெரும்பலி முன்றில் |
|
|
காடுஅமர் செல்வி கழிபெருங் கோட்டமும் |
உரை |
|
அருந்தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும் |
|
55
|
ஒருங்குஉடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும் |
|
|
||
|
நால்வேறு வருணப் பால்வேறு காட்டி |
|
|
இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த |
|
|
குறியவும் நெடியவும் குன்றுகண் டன்ன |
உரை |
|
சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும், |
|
60
|
அருந்திறல் கடவுள் திருந்துபலிக் கந்தமும் |
|
|
||
|
நிறைக்கல் தெற்றியும் மிறைக்களச் சந்தியும் |
|
|
தண்டும் மண்டையும் பிடித்துக் காவலர் |
|
|
உண்டுகண் படுக்கும் உறையுள் குடிகையும், |
|
|
தூமக் கொடியும் சுடர்த்தோ ரணங்களும், |
|
65
|
ஈமப் பந்தரும் யாங்கணும் பரந்து, |
உரை |
|
||
|
சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுப்போர் |
|
|
தாழ்வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர் |
|
|
இரவும் பகலும் இளிவுடன் தரியாது |
|
|
வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும், |
உரை |
70
|
எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி |
|
|
||
|
நெஞ்சு நடுக்குறூஉம் நெய்தல் ஓசையும் |
|
|
துறவோர் இறந்த அழுவிளிப் பூசலும், |
|
|
பிறவோர் இறந்த அழுவிளிப் பூசலும், |
|
|
நீள்முக நரியின் தீவிளிக் கூவும், |
|
75
|
சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும் |
|
|
||
|
புலவுஊண் பொருந்திய குராலின் குரலும் |
|
|
ஊண்தலை துற்றிய ஆண்டலைக் குரலும் |
|
|
நல்நீர்ப் புணரி நளிகடல் ஓதையின் |
|
|
இன்னா இசையொலி என்றும்நின்று அறாது |
உரை |
80
|
தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் ஒங்கிக் |
|
|
||
|
கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து |
|
|
காய்பசிக் கடும்பேய் கணங்கொண்டு ஈண்டும் |
|
|
மால்அமர் பெருஞ்சினை வாகை மன்றமும், |
|
|
வெள்நிணம் தடியொடு மாந்தி மகிழ்சிறந்து |
|
85
|
புள்இறை கூரும் வெள்ளில் மன்றமும், |
|
|
||
|
சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு |
|
|
மடைதீ யுறுக்கும் வன்னி மன்றமும், |
|
|
விரத யாக்கையர் உடைதலை தொகுத்துஆங்கு |
|
|
இருந்தொடர்ப் படுக்கும் இரத்தி மன்றமும் |
|
90
|
பிணம்தின் மாக்கள் நிணம்படு குழிசியில் |
|
|
||
|
விருந்தாட்டு அயரும் வெள்ளிடை மன்றமும் |
உரை |
|
அழல்பெய் குழிசியும் புழல்பெய் மண்டையும் |
|
|
வெள்ளில் பாடையும் உள்ளீட்டு் அறுவையும் |
|
|
பரிந்த மாலையும் உடைந்த கும்பமும் |
|
95
|
நெல்லும் பொரியும் சிம்பலி அரிசியும் |
|
|
||
|
யாங்கணும் பரந்த ஓங்குஇரும் பறந்தலை |
உரை |
|
தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர் |
|
|
ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் |
|
|
முதியோர் என்னான் இளையோர் என்னான் |
|
100
|
கொடுந்தொழி லாளன் கொன்றனன் குவிப்பஇவ் |
|
|
||
|
அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும் |
|
|
கழிபெருஞ் செல்வக் கள்ளாட்டு அயர்ந்து |
|
|
மிக்க நல்லறம் விரும்பாது வாழும் |
|
|
மக்களில் சிறந்த மடவோர் உண்டோ? |
உரை |
105
|
ஆங்குஅது தன்னைஓர் அருங்கடி நகர்எனச் |
|
|
|
|
|
சார்ங்கலன் என்போன் தனிவழிச் சென்றோன் |
உரை |
|
என்பும் தடியும் உதிரமும் யாக்கைஎன்று |
|
|
அன்புறு மாக்கட்கு அறியச் சாற்றி |
|
|
வழுவொடு கிடந்த புழுஊன் பிண்டத்து |
உரை |
110
|
அலத்தகம் ஊட்டிய அடிநரி வாய்க்கொண்டு |
|
|
||
|
உலப்புஇல் இன்பமோடு உளைக்கும் ஓதையும், |
|
|
கலைப்புற அல்குல் கழுகுகுடைந்து உண்டு |
|
|
நிலைத்தலை நெடுவிளி எடுக்கும் ஓதையும், |
|
|
கடகம் செறிந்த கையைத் தீநாய் |
|
115
|
உடையக் கவ்வி ஒடுங்கா ஓதையும், |
|
|
||
|
சாந்தம் தோய்ந்த ஏந்துஇள வனமுலை |
|
|
காய்ந்தபசி எருவை கவர்ந்துஊண் ஓதையும், |
|
|
பண்புகொள் யாக்கையின் வெண்பலி அரங்கத்து |
|
|
மண்கணை முழவம் ஆக ஆங்குஓர் |
உரை |
120
|
கருந்தலை வாங்கிக் கையகத்து ஏந்தி |
|
|
||
|
இரும்பேர் உவகையின் எழுந்துஓர் பேய்மகள் |
உரை |
|
புயலோ குழலோ கயலோ கண்ணோ |
|
|
குமிழோ மூக்கோ இதழோ கவிரோ |
|
|
பல்லோ முத்தோ என்னாது இரங்காது |
|
125
|
கண்தொட்டு உண்டு கவைஅடி பெயர்த்துத் |
|
|
||
|
தண்டாக் களிப்பின் ஆடும் கூத்துக் |
உரை |
|
கண்டனன் வெரீஇக் கடுநவை எய்தி, |
|
|
விண்டுஓர் திசையின் விளித்தனன் பெயர்ந்துஈங்கு |
|
|
எம்அனை காணாய் ஈமச் சுடலையின் |
|
130
|
வெம்முது பேய்க்குஎன் உயிர்கொடுத் தேன்எனத் |
|
|
||
தம்அனை தன்முன் வீழ்ந்துமெய் வைத்தலும், |
உரை | |
|
பார்ப்பான் தன்னொடு கண்இழந்து இருந்தஇத் |
|
|
தீத்தொழி லாட்டிஎன் சிறுவன் தன்னை |
|
|
யாரும்இல் தமியேன் என்பது நோக்காது |
|
135
|
ஆர்உயிர் உண்டது அணங்கோ பேயோ |
|
|
||
|
துறையும் மன்றமும் தொல்வலி மரனும் |
|
|
உறையுளும் கோட்டமும் காப்பாய் காவாய் |
|
|
தகவுஇலை கொல்லோ சம்பா பதிஎன |
|
|
மகன்மெய் யாக்கையை மார்புஉறத் தழீஇ |
|
140
|
ஈமப் புறங்காட்டு எயில்புற வாயிலில் |
|
|
||
|
கோதமை என்பாள் கொடுந்துயர் சாற்ற, |
உரை |
|
கடிவழங்கு வாயிலில் கடுந்துயர் எய்தி |
|
|
இடைஇருள் யாமத்து என்னைஈங்கு அழைத்தனை |
|
|
என்உற் றனையோ எனக்குஉரை என்றே |
|
145
|
பொன்னின் பொலிந்த நிறத்தாள் தோன்ற, |
உரை |
|
||
|
ஆரும்இ லாட்டிஎன் அறியாப் பாலகன் |
|
|
ஈமப் புறங்காட்டு எய்தினோன் தன்னை |
|
|
அணங்கோ பேயோ ஆர்உயிர் உண்டது |
|
|
உறங்குவான் போலக் கிடந்தனன் காண்என, |
உரை |
150
|
அணங்கும் பேயும் ஆர்உயிர் உண்ணா |
|
|
||
|
பிணங்குநூல் மார்பன் பேதுகந் தாக |
|
|
ஊழ்வினை வந்துஇவன் உயிர்உண்டு கழிந்தது |
|
|
மாபெரும் துன்பம் ஒழிவாய் என்றலும், |
உரை |
|
என்உயிர் கொண்டுஇவன் உயிர்தந் தருளில்என் |
|
155
|
கண்இல் கணவனை இவன்காத்து ஓம்பிடும் |
|
|
||
|
இவன்உயிர் தந்துஎன் உயிர்வாங்கு என்றலும், |
உரை |
|
முதுமூ தாட்டி இரங்கினள் மொழிவோள் |
|
|
ஐயம் உண்டோ ஆர்உயிர் போனால் |
|
|
செய்வினை மருங்கில் சென்றுபிறப்பு எய்துதல் |
|
160
|
ஆங்குஅது கொணர்ந்துநின் ஆர்இடர் நீக்குதல் |
|
|
||
|
ஈங்குஎனக்கு ஆவதுஒன்று அன்றுநீ இரங்கல் |
|
|
கொலைஅறம் ஆம்எனும் கொடுந்தொழில் மாக்கள் |
|
|
அவலப் படிற்றுஉரை ஆங்கது மடவாய் |
|
|
உலக மன்னவர்க்கு உயிர்க்குஉயிர் ஈவோர் |
|
165
|
இலரோ இந்த ஈமப் புறங்காட்டு |
|
|
||
|
அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம் |
|
|
நிரயக் கொடுமொழி நீஒழி என்றலும், |
உரை |
|
தேவர் தருவர் வரம்என்று ஒருமுறை |
|
|
நால்மறை அந்தணர் நன்னூல் உரைக்கும் |
|
170
|
மாபெருந் தெய்வம் நீஅரு ளாவிடின் |
|
|
||
|
யானோ காவேன் என்உயிர் ஈங்குஎன, |
உரை |
|
ஊழி முதல்வன் உயிர்தரின் அல்லது |
|
|
ஆழித் தாழி அகவரைத் திரிவோர் |
|
|
தாம்தரின் யானும் தருகுவன் மடவாய் |
|
175
|
ஈங்குஎன் ஆற்றலும் காண்பாய் என்றே |
உரை |
|
||
|
நால்வகை மரபின் அரூபப் பிரமரும் |
|
|
நானால் வகையின் உரூபப் பிரமரும் |
|
|
இருவகைச் சுடரும் இருமூ வகையில் |
|
|
பெருவனப்பு எய்திய தெய்வத கணங்களும் |
|
180
|
பல்வகை அசுரரும் படுதுயர் உறூஉம் |
|
|
||
|
எண்வகை நரகரும் இருவிசும்பு இயங்கும் |
|
|
பல்மீன் ஈட்டமும் நாளும் கோளும் |
|
|
தன்அகத்து அடக்கிய சக்கர வாளத்து |
|
|
வரம்தரற்கு உரியோர் தமைமுன் நிறுத்தி |
|
185
|
அரந்தை கெடும்இவள் அருந்துயர் இதுஎனச் |
உரை |
|
||
|
சம்பா பதிதான் உரைத்தஅம் முறையே |
|
|
எங்குவாழ் தேவரும் உரைப்பக் கேட்டே, |
|
|
கோதமை யுற்ற கொடுந்துயர் நீங்கி |
|
|
ஈமச் சுடலையின் மகனைஇட்டு இறந்தபின் |
உரை |
190
|
சம்பா பதிதன் ஆற்றல் தோன்ற |
|
|
||
|
எங்குவாழ் தேவரும் கூடிய இடம்தனில் |
|
|
சூழ்கடல் வளைஇய வாழியங் குன்றத்து |
|
|
நடுவு நின்ற மேருக் குன்றமும் |
|
|
புடையில் நின்ற எழுவகைக் குன்றமும் |
|
195
|
நால்வகை மரபின் மாபெருந் தீவும் |
|
|
||
|
ஓர்ஈ ராயிரம் சிற்றிடைத் தீவும் |
|
|
பிறவும் ஆங்குஅதன் இடவகை உரியன |
|
|
பெறுமுறை மரபின் அறிவுவரக் காட்டி |
|
|
ஆங்குவாழ் உயிர்களும் அவ்வுயிர் இடங்களும் |
|
200
|
பாங்குற மண்ணீட்டில் பண்புற வகுத்து |
|
|
||
|
மிக்க மயனால் இழைக்கப் பட்ட |
|
|
சக்கர வாளக் கோட்டம்ஈங்கு இதுகாண் |
உரை |
|
இடுபிணக் கோட்டத்து எயில்புறம் ஆதலின் |
|
|
சுடுகாட்டுக் கோட்டத்து என்றலது உரையார் |
|
205
|
இதன்வரவு இதுஎன்று இருந்தெய்வம் உரைக்க, |
உரை |
|
||
|
மதன் இல் நெஞ்சமொடு வான்துயர்எய்திப் |
|
|
பிறந்தோர் வாழ்க்கை சிறந்தோள் உரைப்ப, |
|
|
இறந்துஇருள் கூர்ந்த இடைஇருள் யாமத்துத் |
|
|
தூங்குஎயில் எய்திய சுதமதி ஒழியப் |
|
210
|
பூங்கொடி தன்னைப் பொருந்தித் தழீஇ |
|
|
||
|
அந்தரம் ஆறா ஆறுஐந்து யோசனைத் |
|
|
தென்திசை மருங்கில் சென்றுதிரை உடுத்த |
|
|
மணிபல் லவத்திடை மணிமே கலாதெய்வம் |
|
|
அணிஇழை தன்னைவைத்து அகன்றது தான்என். |
உரை |
|
||
|
சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை முற்றிற்று. |
|