|
6
சக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை
|
|
|
|
|
|
[
மணிமேகலைதனக்கு மணிமேகலாதெய்வம்
|
|
|
சக்கரவாளக்
கோட்டம் உரைத்து
அவளை
|
|
|
மணிபல்லவத்துக்
கொண்டுபோன பாட்டு
]
|
|
|
|
|
|
அந்தி மாலை நீங்கிய பின்னர்
|
|
|
வந்து தோன்றிய மலர்கதிர் மண்டிலம்
|
|
|
சான்றோர் தங்கண் எய்திய குற்றம்
|
|
|
தோன்றுவழி விளங்கும் தோற்றம் போல
|
|
5
|
மாசுஅறு விசும்பில் மறுநிறம் கிளர
|
|
|
|
|
|
ஆசுஅற விளங்கிய அம்தீம் தண்கதிர்
|
|
|
வெள்ளிவெண் குடத்துப் பால்சொரி வதுபோல்
|
|
|
கள்அவிழ் பூம்பொழில் இடைஇடை சொரிய,
|
உரை |
|
உருவு கொண்ட மின்னே போலத்
|
|
10
|
திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள்
|
|
|
|
|
|
ஆதி முதல்வன் அறவாழி ஆள்வோன்
|
|
|
பாத பீடிகை பணிந்தனள் ஏத்திப்
|
|
|
பதியகத்து உறையும்ஓர் பைந்தொடி ஆகிச்
|
|
|
சுதமதி நல்லாள் தன்முகம் நோக்கி
|
|
15
|
ஈங்கு நின்றீர் என்உற் றீர்என
|
உரை |
|
|
|
|
ஆங்குஅவள் ஆங்குஅவன் கூறியது உரைத்தலும்
|
உரை |
|
அரசிளங் குமரன் ஆயிழை தன்மேல்
|
|
|
தணியா நோக்கம் தவிர்ந்திலன் ஆகி
|
|
|
அறத்தோர் வனம்என்று அகன்றனன் ஆயினும்
|
|
20
|
புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான்
|
|
|
|
|
|
பெருந்தெரு ஒழித்துஇப் பெருவனம் சூழ்ந்த
|
|
|
திருந்துஎயில் குடபால் சிறுபுழை போகி
|
|
|
மிக்க மாதவர் விரும்பினர் உறையும்
|
|
|
சக்கர வாளக் கோட்டம் புக்கால்
|
|
25
|
கங்குல் கழியினும் கடுநவை எய்தாது
|
|
|
|
|
|
அங்குநீர் போம்என்று அருந்தெய்வம்
உரைப்ப,
|
உரை |
|
வஞ்ச விஞ்சையன் மாருத வேகனும்
|
|
|
அம்செஞ் சாயல் நீயும் அல்லது
|
|
|
நெடுநகர் மருங்கின் உள்ளோர் எல்லாம்
|
|
30
|
சுடுகாட்டுக் கோட்டம் என்றுஅலது உரையார்
|
|
|
|
|
|
சக்கர வாளக் கோட்டம் அஃதுஎன,
|
|
|
மிக்கோய் கூறிய உரைப்பொருள் அறியேன்
|
|
|
ஈங்கு இதன் காரணம் என்னை யோஎன
|
உரை |
|
ஆங்குஅதன் காரணம் அறியக் கூறுவன்
|
|
35
|
மாதவி மகளொடு வல்இருள் வரினும்
|
|
|
|
|
|
நீகேள் என்றே நேர்இழை கூறும்;இந்
|
உரை |
|
நாமப் பேரூர்
தன்னொடு தோன்றிய
|
|
|
ஈமப் புறங்காடு ஈங்குஇதன் அயலது
|
உரை |
|
ஊரா நல்தேர் ஓவியப் படுத்துத் |
40
|
தேவர் புகுதரூஉம் செழுங்கொடி வாயிலும்
|
|
|
|
|
|
நெல்லும் கரும்பும் நீரும் சோலையும்
|
|
|
நல்வழி எழுதிய நலங்கிளர் வாயிலும்
|
|
|
வெள்ளி வெண்சுதை இழுகிய மாடத்
|
|
|
துள்உரு எழுதா வெள்ளிடை வாயிலும்
|
|
45
|
மடித்த செவ்வாய்க் கடுத்த நோக்கின்
|
|
|
|
|
|
தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து
|
|
|
நெடுநிலை மண்ணீடு நின்ற வாயிலும்
|
|
|
நால்பெரு வாயிலும் பால்பட்டு ஓங்கிய
|
|
|
காப்புஉடை இஞ்சிக் கடிவழங்கு ஆர்இடை
|
உரை |
50
|
உலையா உள்ளமோடு உயிர்க்கடன் இறுத்தோர்
|
|
|
|
|
|
தலைதூங்கு நெடுமரம் தாழ்ந்துபுறம் சுற்றிப்
|
|
|
பீடிகை ஓங்கிய பெரும்பலி முன்றில்
|
|
|
காடுஅமர் செல்வி கழிபெருங் கோட்டமும்
|
உரை |
|
அருந்தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும்
|
|
55
|
ஒருங்குஉடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும்
|
|
|
|
|
|
நால்வேறு வருணப் பால்வேறு காட்டி
|
|
|
இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த
|
|
|
குறியவும் நெடியவும் குன்றுகண் டன்ன
|
உரை |
|
சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்,
|
|
60
|
அருந்திறல் கடவுள் திருந்துபலிக் கந்தமும்
|
|
|
|
|
|
நிறைக்கல் தெற்றியும் மிறைக்களச்
சந்தியும்
|
|
|
தண்டும் மண்டையும் பிடித்துக் காவலர்
|
|
|
உண்டுகண் படுக்கும் உறையுள் குடிகையும்,
|
|
|
தூமக் கொடியும் சுடர்த்தோ ரணங்களும்,
|
|
65
|
ஈமப் பந்தரும் யாங்கணும் பரந்து,
|
உரை |
|
|
|
|
சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுப்போர்
|
|
|
தாழ்வயின் அடைப்போர் தாழியில் கவிப்போர்
|
|
|
இரவும் பகலும் இளிவுடன் தரியாது
|
|
|
வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும்,
|
உரை |
70
|
எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி
|
|
|
|
|
|
நெஞ்சு நடுக்குறூஉம் நெய்தல் ஓசையும்
|
|
|
துறவோர் இறந்த அழுவிளிப் பூசலும்,
|
|
|
பிறவோர் இறந்த அழுவிளிப் பூசலும்,
|
|
|
நீள்முக நரியின் தீவிளிக் கூவும்,
|
|
75
|
சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும்
|
|
|
|
|
|
புலவுஊண் பொருந்திய குராலின் குரலும்
|
|
|
ஊண்தலை துற்றிய ஆண்டலைக் குரலும்
|
|
|
நல்நீர்ப் புணரி நளிகடல் ஓதையின்
|
|
|
இன்னா இசையொலி என்றும்நின்று அறாது
|
உரை |
80
|
தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் ஒங்கிக்
|
|
|
|
|
|
கான்றையும் சூரையும் கள்ளியும் அடர்ந்து
|
|
|
காய்பசிக் கடும்பேய் கணங்கொண்டு ஈண்டும்
|
|
|
மால்அமர் பெருஞ்சினை வாகை மன்றமும்,
|
|
|
வெள்நிணம் தடியொடு மாந்தி மகிழ்சிறந்து
|
|
85
|
புள்இறை கூரும் வெள்ளில் மன்றமும்,
|
|
|
|
|
|
சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு
|
|
|
மடைதீ யுறுக்கும் வன்னி மன்றமும்,
|
|
|
விரத யாக்கையர் உடைதலை தொகுத்துஆங்கு
|
|
|
இருந்தொடர்ப் படுக்கும் இரத்தி மன்றமும்
|
|
90
|
பிணம்தின் மாக்கள் நிணம்படு குழிசியில்
|
|
|
|
|
|
விருந்தாட்டு அயரும் வெள்ளிடை மன்றமும்
|
உரை |
|
அழல்பெய் குழிசியும் புழல்பெய் மண்டையும்
|
|
|
வெள்ளில் பாடையும் உள்ளீட்டு் அறுவையும்
|
|
|
பரிந்த மாலையும் உடைந்த கும்பமும்
|
|
95
|
நெல்லும் பொரியும் சிம்பலி அரிசியும்
|
|
|
|
|
|
யாங்கணும் பரந்த ஓங்குஇரும் பறந்தலை
|
உரை |
|
தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர்
|
|
|
ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர்
|
|
|
முதியோர் என்னான் இளையோர் என்னான்
|
|
100
|
கொடுந்தொழி லாளன் கொன்றனன் குவிப்பஇவ்
|
|
|
|
|
|
அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும்
|
|
|
கழிபெருஞ் செல்வக் கள்ளாட்டு அயர்ந்து
|
|
|
மிக்க நல்லறம் விரும்பாது வாழும்
|
|
|
மக்களில் சிறந்த மடவோர் உண்டோ?
|
உரை |
105
|
ஆங்குஅது தன்னைஓர் அருங்கடி நகர்எனச்
|
|
|
|
|
|
சார்ங்கலன் என்போன் தனிவழிச் சென்றோன்
|
உரை |
|
என்பும் தடியும் உதிரமும் யாக்கைஎன்று
|
|
|
அன்புறு மாக்கட்கு அறியச் சாற்றி
|
|
|
வழுவொடு கிடந்த புழுஊன் பிண்டத்து
|
உரை |
110
|
அலத்தகம் ஊட்டிய அடிநரி வாய்க்கொண்டு
|
|
|
|
|
|
உலப்புஇல் இன்பமோடு உளைக்கும் ஓதையும்,
|
|
|
கலைப்புற அல்குல் கழுகுகுடைந்து உண்டு
|
|
|
நிலைத்தலை நெடுவிளி எடுக்கும் ஓதையும்,
|
|
|
கடகம் செறிந்த கையைத் தீநாய்
|
|
115
|
உடையக் கவ்வி ஒடுங்கா ஓதையும்,
|
|
|
|
|
|
சாந்தம் தோய்ந்த ஏந்துஇள வனமுலை
|
|
|
காய்ந்தபசி எருவை கவர்ந்துஊண் ஓதையும்,
|
|
|
பண்புகொள் யாக்கையின் வெண்பலி அரங்கத்து
|
|
|
மண்கணை முழவம் ஆக ஆங்குஓர்
|
உரை |
120
|
கருந்தலை வாங்கிக் கையகத்து ஏந்தி
|
|
|
|
|
|
இரும்பேர் உவகையின் எழுந்துஓர் பேய்மகள்
|
உரை |
|
புயலோ குழலோ கயலோ கண்ணோ
|
|
|
குமிழோ மூக்கோ இதழோ கவிரோ
|
|
|
பல்லோ முத்தோ என்னாது இரங்காது
|
|
125
|
கண்தொட்டு உண்டு கவைஅடி பெயர்த்துத்
|
|
|
|
|
|
தண்டாக் களிப்பின் ஆடும் கூத்துக்
|
உரை |
|
கண்டனன் வெரீஇக் கடுநவை எய்தி,
|
|
|
விண்டுஓர் திசையின் விளித்தனன் பெயர்ந்துஈங்கு
|
|
|
எம்அனை காணாய் ஈமச் சுடலையின்
|
|
130
|
வெம்முது பேய்க்குஎன் உயிர்கொடுத் தேன்எனத்
|
|
|
|
|
|
தம்அனை தன்முன் வீழ்ந்துமெய் வைத்தலும்,
|
உரை |
|
பார்ப்பான் தன்னொடு கண்இழந்து இருந்தஇத்
|
|
|
தீத்தொழி லாட்டிஎன் சிறுவன் தன்னை
|
|
|
யாரும்இல் தமியேன் என்பது நோக்காது
|
|
135
|
ஆர்உயிர் உண்டது அணங்கோ பேயோ
|
|
|
|
|
|
துறையும் மன்றமும் தொல்வலி மரனும்
|
|
|
உறையுளும் கோட்டமும் காப்பாய் காவாய்
|
|
|
தகவுஇலை கொல்லோ சம்பா பதிஎன
|
|
|
மகன்மெய் யாக்கையை மார்புஉறத் தழீஇ
|
|
140
|
ஈமப் புறங்காட்டு எயில்புற வாயிலில்
|
|
|
|
|
|
கோதமை என்பாள் கொடுந்துயர் சாற்ற,
|
உரை |
|
கடிவழங்கு வாயிலில் கடுந்துயர் எய்தி
|
|
|
இடைஇருள் யாமத்து என்னைஈங்கு அழைத்தனை
|
|
|
என்உற் றனையோ எனக்குஉரை என்றே
|
|
145
|
பொன்னின் பொலிந்த நிறத்தாள் தோன்ற,
|
உரை |
|
|
|
|
ஆரும்இ லாட்டிஎன் அறியாப் பாலகன்
|
|
|
ஈமப் புறங்காட்டு எய்தினோன் தன்னை
|
|
|
அணங்கோ பேயோ ஆர்உயிர் உண்டது
|
|
|
உறங்குவான் போலக் கிடந்தனன் காண்என,
|
உரை |
150
|
அணங்கும் பேயும் ஆர்உயிர் உண்ணா
|
|
|
|
|
|
பிணங்குநூல் மார்பன் பேதுகந் தாக
|
|
|
ஊழ்வினை வந்துஇவன் உயிர்உண்டு கழிந்தது
|
|
|
மாபெரும் துன்பம் ஒழிவாய் என்றலும்,
|
உரை |
|
என்உயிர் கொண்டுஇவன் உயிர்தந் தருளில்என்
|
|
155
|
கண்இல் கணவனை இவன்காத்து ஓம்பிடும்
|
|
|
|
|
|
இவன்உயிர் தந்துஎன் உயிர்வாங்கு என்றலும்,
|
உரை |
|
முதுமூ தாட்டி இரங்கினள் மொழிவோள்
|
|
|
ஐயம் உண்டோ ஆர்உயிர் போனால்
|
|
|
செய்வினை மருங்கில் சென்றுபிறப்பு எய்துதல்
|
|
160
|
ஆங்குஅது கொணர்ந்துநின் ஆர்இடர் நீக்குதல்
|
|
|
|
|
|
ஈங்குஎனக்கு ஆவதுஒன்று அன்றுநீ இரங்கல்
|
|
|
கொலைஅறம் ஆம்எனும் கொடுந்தொழில்
மாக்கள்
|
|
|
அவலப் படிற்றுஉரை ஆங்கது மடவாய்
|
|
|
உலக மன்னவர்க்கு உயிர்க்குஉயிர் ஈவோர்
|
|
165
|
இலரோ இந்த ஈமப் புறங்காட்டு
|
|
|
|
|
|
அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம்
|
|
|
நிரயக் கொடுமொழி நீஒழி என்றலும்,
|
உரை |
|
தேவர் தருவர் வரம்என்று ஒருமுறை
|
|
|
நால்மறை அந்தணர் நன்னூல் உரைக்கும்
|
|
170
|
மாபெருந் தெய்வம் நீஅரு ளாவிடின்
|
|
|
|
|
|
யானோ காவேன் என்உயிர் ஈங்குஎன,
|
உரை |
|
ஊழி முதல்வன் உயிர்தரின் அல்லது
|
|
|
ஆழித் தாழி அகவரைத் திரிவோர்
|
|
|
தாம்தரின் யானும் தருகுவன் மடவாய்
|
|
175
|
ஈங்குஎன் ஆற்றலும் காண்பாய் என்றே
|
உரை |
|
|
|
|
நால்வகை மரபின் அரூபப் பிரமரும்
|
|
|
நானால் வகையின் உரூபப் பிரமரும்
|
|
|
இருவகைச் சுடரும் இருமூ வகையில்
|
|
|
பெருவனப்பு எய்திய தெய்வத கணங்களும்
|
|
180
|
பல்வகை அசுரரும் படுதுயர் உறூஉம்
|
|
|
|
|
|
எண்வகை நரகரும் இருவிசும்பு இயங்கும்
|
|
|
பல்மீன் ஈட்டமும் நாளும் கோளும்
|
|
|
தன்அகத்து அடக்கிய சக்கர வாளத்து
|
|
|
வரம்தரற்கு உரியோர் தமைமுன் நிறுத்தி
|
|
185
|
அரந்தை கெடும்இவள் அருந்துயர் இதுஎனச்
|
உரை |
|
|
|
|
சம்பா பதிதான் உரைத்தஅம் முறையே
|
|
|
எங்குவாழ் தேவரும் உரைப்பக் கேட்டே,
|
|
|
கோதமை யுற்ற கொடுந்துயர் நீங்கி
|
|
|
ஈமச் சுடலையின் மகனைஇட்டு இறந்தபின்
|
உரை |
190
|
சம்பா பதிதன் ஆற்றல் தோன்ற
|
|
|
|
|
|
எங்குவாழ் தேவரும் கூடிய இடம்தனில்
|
|
|
சூழ்கடல் வளைஇய வாழியங் குன்றத்து
|
|
|
நடுவு நின்ற மேருக் குன்றமும்
|
|
|
புடையில் நின்ற எழுவகைக் குன்றமும்
|
|
195
|
நால்வகை மரபின் மாபெருந் தீவும்
|
|
|
|
|
|
ஓர்ஈ ராயிரம் சிற்றிடைத் தீவும்
|
|
|
பிறவும் ஆங்குஅதன் இடவகை உரியன
|
|
|
பெறுமுறை மரபின் அறிவுவரக் காட்டி
|
|
|
ஆங்குவாழ் உயிர்களும் அவ்வுயிர் இடங்களும்
|
|
200
|
பாங்குற மண்ணீட்டில் பண்புற வகுத்து
|
|
|
|
|
|
மிக்க மயனால் இழைக்கப் பட்ட
|
|
|
சக்கர வாளக் கோட்டம்ஈங்கு இதுகாண்
|
உரை |
|
இடுபிணக் கோட்டத்து எயில்புறம் ஆதலின்
|
|
|
சுடுகாட்டுக் கோட்டத்து என்றலது உரையார்
|
|
205
|
இதன்வரவு இதுஎன்று இருந்தெய்வம் உரைக்க,
|
உரை |
|
|
|
|
மதன் இல் நெஞ்சமொடு வான்துயர்எய்திப்
|
|
|
பிறந்தோர் வாழ்க்கை சிறந்தோள்
உரைப்ப,
|
|
|
இறந்துஇருள் கூர்ந்த இடைஇருள் யாமத்துத்
|
|
|
தூங்குஎயில் எய்திய சுதமதி ஒழியப்
|
|
210
|
பூங்கொடி தன்னைப் பொருந்தித் தழீஇ
|
|
|
|
|
|
அந்தரம் ஆறா ஆறுஐந்து யோசனைத்
|
|
|
தென்திசை மருங்கில் சென்றுதிரை உடுத்த
|
|
|
மணிபல் லவத்திடை மணிமே கலாதெய்வம்
|
|
|
அணிஇழை தன்னைவைத்து அகன்றது தான்என்.
|
உரை |
|
|
|
|
சக்கரவாளக்கோட்டம்
உரைத்த காதை முற்றிற்று.
|
|
|