58. சயந்தி புக்கது
 

இதன்கண் : உதயணன் முதலியோர் படைவீட்டி னின்றும் யானை முதலிய ஊர்திகளில் ஏறி உருமண்ணுவா என்னும் அமைச்சன் உறையும் சயந்தி மாநகரத்திற்குச் செல்லும், பல நாட்டுக் கைத்தொழிலாளர் வரவும், வாசவதத்தை ஊர்தியின் மாண்பும், குடிமக்கள் செயலும், உதயணன் முதலியோர் சயந்தி நகரத்தை அடைதலும் பிறவும் கூறப்படும்.
 
              விறல்படை சூழ விளங்குமணிப் பைம்பூண்
            மறப்படை நோன்தாள் வத்தவர் பெருமகன்
            போரகத்து எழுந்த பூசல் வினைஞர்
            மார்பகம் போழ்தலின் ஈரம் தீரா
        5   நெய்த்தோர்க் கச்சையின் நித்திலம் போலச்
            செம்மை சேர்ந்த வெண்மைய ஆகிய
            ஏந்தெழில் ஆகத்து இறுவரைத் தாழ்ந்த
            பாந்தள் அன்ன பரேரெறுழ்த் தடக்கையின்
            மிதிதோல் கொல்லன் பொதிஉலைச் செந்தீத்
       10    ததர்வன போலச் சிதர்வன சிந்திப்
            புகர்அணிந்து ஓங்கிய நெற்றிப் பூங்கவுள்
            அயஅண்சும் பிருந்த நாந்தல் அற்றத்து
            மதக்களி சுவைக்கும் மணிநிறப் பறவைத்
            தொகைத்தொழில் ஓப்பும் தகைச்செவிக்கு ஏற்பப்
       15    பணைத்த எருத்தின் பைங்கண் செயிர்நோக்கு
 
              அணைப்பக் கண்டதன் அணிநிழல் சீற்றத்து
            நீல மால்வரை  நிமிர்ந்துநடந்து அன்ன
            கோலக் குஞ்சரம் கொள்ளப் பண்ணிப்
            பாகர் தருதலின் பணைஎருத் தேறிக்
       20    கருமுகில் மருங்கின் இருளறுத்து ஏர்தரும்
            வெம்மைச் செல்வன் மேநிலை பெற்ற
            தண்மைத் திங்களின் தகைக்குடை நிழற்ற
            உதையண குமரன் ஒளிபெறத் தோன்றப்
 
              புதைகுப் பாயத்துப் பூண்ட வாளில்
       25    கடுங்கண் காவலர் கொடுங்கோடு சிலைப்ப
            எப்பால் மருங்கினும் மொய்ப்புற்று விளங்கிக்
            கிழியிடம் பெறாஅர் வழியிடம் பார்ப்ப
            யானையும் புரவியும் சேனையும் செல்ல
            விடற்குஅரும் தோழர் புடைக்களிறு ஏற
 
         30    அந்தண் பொதியில் சந்தன மரமும்
            நறுந்தண் சோலை இருங்கால் திமிசும்
            அடவி விந்தத்து யானை மருப்பும்
            வடதிசை மாமலைச் சுடர்விடு பொன்னும்
            குடகடல் பிறந்த படர்கொடிப் பவழமும்
       35   தென்றிசைப் பிறந்த வெண்சுடர் மணியும்
            விஞ்சைஅம் பெருமலை விளங்கொளி வெள்ளியும்
            இலங்கை ஈழத்துக் கலந்தரு செப்பும்
            இமயத்துப் பிறந்த வயிரச் சாதியும்
            கடாரத்து இரும்பொடு கையகத்து அடக்கி
 
         40   யவனத் தச்சரும் அவந்திக் கொல்லரும்
            மகதத்துப் பிறந்த மணிவினைக் காரரும்
            பாடலிப் பிறந்த பசும்பொன் வினைஞரும்
            கோசலத்து இயன்ற ஓவியத் தொழிலரும்
            வத்த நாட்டு வண்ணக் கம்மரும்
       45    தத்தம் கோள்மேல்றம் கைத்தொழில் தோன்ற
 
              ஆரமும் சூட்டும் நேர்துணைக் குழிசியும்
            அச்சு மாணியும் வச்சிர யாப்பும்
            அகவாய்க் கோடும் புறவாய்ப் பூணும்
            பத்திரப் பந்தமுஞ் சித்திரப் புளகமும்
       50    புறமணைப் பலகையும் அகமணைத் தட்டும்
            சந்திக் கோணமும் எந்திர ஆணியும்
            கஞ்சிகைக் கொளுவோடு கயிற்றுநிலை அமைத்து
            மூக்குங் கோடுங் கோப்புமுறை கொளீஇ
            முகத்தூ ணளவு மகத்தூ ணமைதியும்
       55    நூலிட்டு அமைத்த கோலக் கூடத்து
 
              நாண்மீன் ஒழுக்கும் கோள்மீன் கோப்பும்
            கரந்துறை கோளொடு நிரந்தவை நிறீஇயவற்று
            ஏழ்ச்சியும் இறுதியும் சூழ்ச்சியும் உணர
            அரும்பொறி மண்டலம் அகவயின் இயற்றிப்
       60   புலமை உணர்ந்து புலங்கெழு நுட்பத்துப்
            பெரும்பொறிப் பாவை மருங்கின் நிறீஇ
            முடியும் அடியும் முறைமையில் புனைந்து
            கொடியும் மலரும் கொள்வழி எழுதிப்
 
              பிடியும் களிறும் பிறவும் இன்னவை
       65   வடிமாண் சோலையொடு வகைபெற வரைந்து
            நயத்திறம் பொருந்த நாடகம் கண்டும்
            விசித்திர வனப்பின் வீணை எழீஇயும்
            பொன்னும் மணியும் பன்மலர்த் தாரும்
            திருத்தி அணிந்து மருப்புநெய் பூசிச்
       70   சேண்நெறி செல்லக் கோண்நெறி கொளுத்தி
 
              உலைவில் ஊர்ச்சி வலவன் காத்தலின்
            புதுத்துணை மகளிர் ஒதுக்குநடை ஏத்தக்
            காஞ்சன மாலை பூம்புறத்து அசைஇ
            மாசில் விண்ணவன் மடமகள் போல
       75    வாசவ தத்தை வையம் ஏறக்
            கோல்தொழி லாளர் மாற்றுமொழி இயம்பக்
            கொடிபல நுடங்கக் குன்றம் சிலம்ப
            இடிஉறழ் முரசின் இருங்கண் நெருக்கிக்
 
              காட்டக மருங்கின் வீட்டிடம் அமைகெனப்
       80   பெருமலைச் சாரல் சீறூர் வாழும்
            காலக் குறும்ப ஒலைத் தூதில்
            பெரும்பொறி அண்ணல் அரும்பொறி ஒற்றிக்
            குழிப்படு வேழக் கூன்மருப்பு இரட்டையும்
            வரைப்படு தேனும் சினைப்படு கனியும்
       85   வீணைத் தண்டும் வேய்படு முத்தும்
            கானத்து அகிலும் ஏனத் தெறியும்
            பொறிப்புலித் தோலும் மறுப்பியல் ஊகமும்
            மந்திப் பிணையொடு மற்றவை பிறவும்
            தம்திறை தந்து முந்துசிறைப் பட்ட
 
         90   அற்ற காலத்து முற்ற நோக்கி
            அடியுறை செய்தொழில் குடிமுதல் பிழைத்தல்
            இருநிலம் பெயரினும் எம்மாட்டு இலவெனப்
            பெருமகன் தமரொடு தெளிவனர் தேற்றி
 
              உழைப்படை யாப்பில் புடைப்படை காப்ப
       95   மிலைச்ச மன்னர் தலைப்படை ஒட்ட
            நற்படைத் தோழர் வில்படை பின்வரக்
            கடல்கிளர்ந்து அன்ன அடலருந் தானை
            இறும்புஅமல் அடுக்கத்துக் குறும்புபல போகி
 
              அரில்அறல் அகவயின் ஆடுதல் ஆனா
      100    வரிஅகட்டு அலவன் வள்ளுகிர் உற்றெனக்
            கன்னி வாளை உண்ணாது ஒடுங்கும்
            தண்பணை தழீஇய வண்பணை வளநாடு
            அருமிளை உடுத்த அமைவில் குன்றாது
            பெருமலை சூழ்ந்த அரிதியல் அமைவோடு
      105    இழிக்கப் படாஅ எழில்பொலிவு எய்திப்
            பெருமண் உவாவும் பேராப் பல்படை
            உருமண் ணுவாவுக் குரிமையி னிருந்த
            சயந்தியம் பெரும்பதி யமர்ந்துபுக் கனரால்
            இயைந்த செம்மையொ டியைந்திசி னோரென்.