தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • தமிழ்
  • English

6.5 தொகுப்புரை

  • 6.5 தொகுப்புரை

    இப்பாடத்தால் அறியும் செய்திகள் இங்குத் தொகுத்துக்
    கூறப்படுகின்றன.

    • வைணவ சமயத் தொண்டர்கள் ஆழ்வார் எனப்பட்டனர்.
      இறைவன் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருப்போர் என்பது
      ஆழ்வார் என்பதன் பொருள்.
    • ஆழ்வார்கள் பன்னிருவர். அவருள் பொய்கையாழ்வார்,
      பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்ற மூவரும் முதலாழ்வார்
      எனப்படுவர்.
    • இம்மூவர்க்கும் பொதுவான வரலாறு அமைந்துள்ளது. மூவரும்
      தொண்டை நாட்டில் பிறந்தோர்; வெண்பாவில் திருமாலைப்
      பாடியோர்; மூவரையும் சேர்த்தே வணங்குவது வைணவ மரபு.
      மூவரும் திருமாலால் திருக்கோவலூரில் ஆட்கொள்ளப்
      பட்டனர்.
    • மூவரும் பாடிய பிரபந்தங்கள் நாலாயிரத்தி்ல் இயற்பா என்ற
      பிரிவில் அடங்கும்.
    • மூவரும் தம் பிரபந்தங்களில் திருமாலின் திருமேனி,
      திருமாலின் அவதாரச் செயல்கள், அவரை வழிபடும் முறை,
      வழிபடுவதால் அடையும் பேறு முதலியவற்றை
      விளக்கியுள்ளனர்.
    • ஆழ்வார்கள் ஐம்புலன்கள், எண்திசைகள், ஐம்பூதங்கள்,
      வேதம், அறம் முதலிய அனைத்தையும் திருமாலாகவே
      காண்கின்றனர்.
    • சிவபெருமானை முழுமுதற் பொருளாகக் கொள்வர் சைவர்.
      ஆனால் ஆழ்வார்கள் சிவபெருமானிடத்தும் திருமாலையே
      காண்கின்றனர். அஃதாவது, சிவனும் திருமாலின் ஒரு கூறு
      என்கின்றனர்.
    1.
    பூதத்தாழ்வார் பிறந்த திருப்பதி எது?
    2.
    பூதத்தாழ்வார் என்ற பெயர் அமையக் காரணம் யாது?
    3.
    பெருந்தமிழன் என்று தன்னை அழைத்துக் கொண்ட
    ஆழ்வார் யார்?
    4.
    பேயாழ்வார் என்று பெயர் அமையக் காரணம் யாது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 23:04:17(இந்திய நேரம்)