Primary tabs
- 1.5 தொகுப்புரை
தமிழ்மொழி உலகத்திலுள்ள தொன்மையான மொழிகளில் ஒன்று; தொடக்க காலத்தில் மூன்று சங்கங்கள் நிறுவித் தமிழ் இலக்கியங்களை வளர்த்தமைக்குரிய சான்றுகள் பல உள்ளன.
தமிழ் தந்த முனிவராகக் கருதப்படும் அகத்தியரால் அகத்தியம் என்ற முத்தமிழ் இலக்கணநூல் இயற்றப்பட்டது என்பர். அவருக்குத் தொல்காப்பியர் உட்பட 12 மாணாக்கர் இருந்திருக்கின்றனர் என்ற கருத்து உள்ளது.
தமிழ் நூல்களுள் மிகவும் தொன்மையான இலக்கணம் தொல்காப்பியம். அதை இயற்றியவர் தொல்காப்பியர். அதில் எழுத்திற்கும், சொல்லிற்கும், பொருளுக்கும் உரிய இலக்கணங்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
வாழ்க்கையை அகம், புறம் என்று பிரித்து, அவற்றைப் பற்றி இலக்கியம் படைப்பதற்கு இலக்கணம் வகுத்துள்ளது தொல்காப்பியம். தமிழ்மொழியின் சிறப்பினைப் பறைசாற்றும் ஓர் இலக்கண நூல் தொல்காப்பியம்.