தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • பாடம் - 1
    P10111  சிறுகதை - ஓர் அறிமுகம்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இப்பாடப் பகுதி, சிறுகதை என்றால் என்ன? என்பதை விளக்கி, சிறுகதை பற்றிய மேலை நாட்டு, நம்நாட்டு அறிஞர்களின் கருத்துகளை எடுத்துரைக்கின்றது. நாவலுக்கும், சிறுகதைக்கும் உள்ள வேறுபாட்டை எடுத்துரைக்கிறது. சிறுகதையின் வரையறைகளையும், உத்திகளையும், நடைப் போக்கையும், சிறுகதை வகைகளையும் விளக்கியுரைக்கிறது. சிறுகதை பற்றிய ஒரு முழுமையான பார்வையை, புரிதலை ஏற்படுத்தித் தர முற்படுகிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?



    • சிறுகதை பற்றிய ஒரு தெளிந்த சிந்தனையைப் பெற முடியும்.

    • நாவல் இலக்கியத்திலிருந்து சிறுகதை எப்படி மாறுபட்டது, அதன் தனிப்போக்கு எத்தகையது என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.
    • தமிழ் இலக்கிய உலகில் சிறுகதைகளுக்கான இடத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 07:58:09(இந்திய நேரம்)