Primary tabs
-
6.0 பாட முன்னுரை
வைணவக் காப்பியங்களைப் பற்றி விரிவாகக் காப்பியங்கள் என்ற தாளில் பார்த்திருப்பீர்கள். அதனால் வைணவ சமயக் காப்பியங்கள் பற்றி இங்கு மிகச் சுருக்கமாகவே கூறப்படுகிறது.
மழை பெய்வதற்கு முன் மழைக்கான அறிகுறிகள் தோன்றும்; மழை பெய்த பின்னரும் மழை பெய்ததற்கான அடையாளம் தென்படும். அதுபோல, பக்தி இயக்கத்திற்கு முன்னும் பின்னும் பல இலக்கியப் பதிவுகள், இலக்கணப் பதிவுகள் உள்ளன. அவற்றை வைணவம் வளர எப்படிப் புலவர்கள் பயன்படுத்திக் கொண்டனர் எனக் காண்போமா?