Primary tabs
நூல் விளக்கம்
எழுத்தியல்
தெய்வ வணக்கமும், எழுத்து இயம்புவன்
என்பதும்
1
எண், பெயர், முறை, பிறப்பு, உரு, அளவு,
முதனிலை, ஈற்றுநிலை, இடைநிலை, போலி, பதம்,
புணர்ப்பு என்ற எழுத்தின் பன்னிரண்டு
பகுதிகள்.
2
எழுத்து நாதத்தின் காரியமாய்ச் சொல்லுக்குக்
காரணமாய் இருக்கும் என்பதும், அது முதல் சார்பு
என இரு வகைப்படும் என்பதும்.
3
முதலெழுத்து உயிரும் மெய்யும் என்பதும், உயிர்
பன்னிரண்டு மெய் பதினெட்டு என்பதும்.
4
சார்பெழுத்துக் குற்றியலிகரம் குற்றியலுகரம்
ஆய்தம் உயிர்மெய் உயிரளபெடை ஒற்றளபெடை
ஐகாரக்குறுக்கம் ஒளகாரக்குறுக்கம்
மகரக்குறுக்கம் என்ற ஒன்பது என்பதும்,
உயிர்மெய் 216 உயிரளபெடை 7 ஒற்றளபெடை 11 ஏனைய
ஒன்றொன்று என்பதும்.
5
உயிர் பன்னிரண்டு இவை என்பதும், குறில் அ இ உ எ
ஒ என்ற ஐந்து என்பதும், நெடில் ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள
என்ற ஏழு என்பதும், அ இ உ என்ற மூவெழுத்து மொழி
முதற்கண் சுட்டுப் பொருள் தந்துவரின் சுட்டு
என்பதும், எ யா இரண்டும் மொழிக்கு முதலிலும் ஆ
ஓ இரண்டும் மொழிக்கு ஈற்றிலும் ஏ மொழிக்கு
முதலிலும் ஈற்றிலும் வினாப் பொருள் தந்துவரின்
வினா என்பதும்.
6