Primary tabs
LXVII
ககரம் முதல் மெய் 18 என்பதும், வல்லினம் கசடதபற
என்பதும், மெல்லினம் ஙஞணநமன என்பதும், இடையினம்
யரலவழள என்பதும்.
7
தோற்றம் அளவு செய்கை பொருள்வடிவு என்பன.
இனமமைத்தற்குக் காரணம் என்பதும், இனத்தினாலும்
சிறப்பினாலும் பொருந்தி அகரம் முதல்
னகரம் இறுதியாக வைக்கப்படுவது முறை
என்பதும்.
8
உந்தியில் தோன்றும் உதானன் என்ற காற்று உச்சி
கழுத்து மார்பு மூக்கு இவற்றை அடைந்து, உதடு நா
பல் மேல்வாய் இவற்றின் முயற்சியால் வெவ்வேறு
எழுத்தொலியாய் வரும் எழுத்தின் பொதுப்பிறப்பு
என்பது.
9
உயிருக்கும் இடையினமெய்க்கும் கழுத்தும்,
வல்லின மெய்க்குத் தலையும், மெல்லின மெய்க்கு
மூக்கும் பிறப்பிடம் ஆகும் என்பது.
10
ஆ ஆ அங்காத்தலாலும், இ ஈ எ ஏ ஐ அங்காப்போடு
அண்பல்முதல் நாவிளிம்பு உறுதலாலும், உ ஊ ஒ ஓ ஒள
இதழ்குவிதலாலும் பிறக்கும் என்பது.
11
கங முதல் நா முதல் அண்ணமும், சஞ இடைநா இடைஅண்ணமும், டண நுனிநா நுனி அண்ணமும், தந அண்பல் அடி நாமுடியும், பம மேலுதடும் கீழுதடும் உறப்பிறக்குங் என்பதும், ய க ர ம் எழுவனி மிடற்றுச் சேர்ந்த இசை மேல்வாயைப் பொருந்தி உரலாணி யிட்டாற்போலச் செறிதலானும், ர ழ அண்ணத்தை நுனிநா வருடலானும், லகரம் அண்பல் முதலைநாவிளிம்பு வீங்கி ஒற்றுதலானும்,