தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


வேற்றுநூல் நூற்பாக்கள்

1
தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும்
தான்தற் புகழ்தல் தகுதி அன்றே.
 
 
2
மன்னுடை மன்றத்து ஓலைத் தூக்கினும்
தன்னுடை ஆற்றல் உணரார் இடையினும்
மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும்
தன்னை மறுதலை பழித்த காலையும்
தன்னைப் புகழ்தலும் தகும்புல வோற்கே.
(இவை இரண்டு நூற்பாக்களும் பனம்பாரம்)
 
 
3
நெடிலே குறில்நெடில் குறில்இணை என்றிவை
ஒற்றொடு வருதலொடு குற்றொற்று இறுதிஎன்று
ஏழ்குற் றுகரக்கு இடன்எனல் மொழிப.
 
 
4
தனிநிலை முதல்நிலை இடைநிலை ஈறுஎன
நால்வகைப் படூஉம்அளவு ஆய்வரும் இடனே.
 
 
5
இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கித்
திரிபுவேறு உடையது புடைநூல் ஆகும்.
 
 
6
செய்யுட்கண் ஓசை சிதையுங்கால் ஈரளபும்
ஐயப்பாடு இன்றி அணையுமாம்-மைதீர்ஒற்று
இன்றியும் செய்யுள் கெடின்ஒற்றை உண்டாக்கும்
குன்றுமேல் ஒற்றளபும் கொள்.
 
 
7
மாத்திரை வகையான் தளைதம கெடாநிலை
யாப்புஅழி யாமைஎன்று அளபெடை வேண்டும்.
 
 
8
தன்னை உணர்த்தின் எழுத்தாம் பிறபொருளைச்
சுட்டுதற் கண்ணேயாம் சொல்.
 
 
9
பலாஅஞ் சிலாஅம் என்மனார் புலவர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 20:36:51(இந்திய நேரம்)