பகர்செய்யுள் மங்கலச்சொல் எழுத்து, தானம்,
பால்,உண்டி, வருணம்,நாள், கதியே என்றா
புகரில்கணம் எனப்பத்தும் பிறங்கு கேள்விப்
புலவர்புகழ் முன்மொழிக்குப் புகல்வர்; செம்பொன்
சிகரகிரி எனப்பணைத்துப் புடைத்து விம்மித்
திரண்டுஎழுந்து வளர்ந்துஇளகிச் செறிந்த கொங்கைத்
தகரமலர்க் குழல்கருங்கண் குமுதச் செவ்வாய்ச்
சரிவளைக்கைக் கொடிஎன்னத் தயங்கும் மாதே!’
1
‘மாமணிதேர் புகழ்அமுதம் எழுத்து கங்கை
மதிபரிதி களிறுபரி உலகம் சீர்நாள்
பூமலைகார் திருகடல்நீர் பழனம் பார்சொல்
பொன்திகரி பிறவும்முதல் மொழிச்சீர்க்கு ஆகும்;
நாமவகை யுளிசேர்தல் பொருளது இன்மை
நலம்இலதாய் வைத்தல்பல பொருளாய்த் தோன்றல்
ஆம்இனிய சொல்ஈறு திரிதல் போலும்
ஆதிமொழிக்கு ஆகாத ஆனந் தம்மே.’ 2
* இந்நூலின் முதல் மூன்று இயல்களும் செய்யுளியல் செய்திகளைக் கூறலின் அவை இலக்கணவிளக்கச் செய்யுளியலின்
பிற்சேர்க்கையாகத் தரப்பட்டன. பின் இரண்டு இயல்களும் பாட்டி
யல்
செய்திகளைக் கூறலின், இவ்வியலின்
பிற்சேர்க்கைக்கண் இடம்பெறுகின்றன.