இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்
எழுத்துப் பொருத்தமும் தானப் பொருத்தமும்
‘ஆனஎழுத்து ஒன்பதுஏழ்
ஐந்து மூன்றாம்;
ஆகாதுஎட்டு ஆறுநான்கு ஆதிச்
சீர்க்கே;
தானம்; இதை வகையாம்அந் தாதி தன்னில்,
தலைவன்பேர் முதல் எழுத்தில், பாலன்
ஆதி
மேல்நிரைஎண் ணில்பால குமார ராசர்
வேண்டிடும்;வேண் டாவிருத்தம் மரணம்
தானே.’
‘மருவுகுறில் ஆண்; நெடில்பெண்; அவர்இ வர்க்கா
மயங்கினும்ஆம்; வரலாகா பேடுஒற்று
ஆய்தம்;
உயிர்க்குறில்நான்கு
இவைஅமுதம் ஆதிச் சீர்க்கும்
அரியதசாங் கத்தயற்கும் நலமது ஆகும்;
அமுதமொழிக்கு அல்லாத
எழுத்தும் கால்மாத்
திரைஅளவுஅஃ கேனமுடன் மூன்றும் நஞ்சாய்ச்
செப்புஎழுத்து இவைஎல்லாம்
தீதாம் அன்றே.’
‘தீதுஇல்உயிர் ஈராறும் முதல்ஒற்று ஆறும்
திருமறையோர்க்கு அடைவே;ஓர்
ஆறு வேந்தர்க்கு;
ஏதுஇல்லவ றன-கள்வணி கர்க்குஆம்; மற்றை
எழுத்துளவை சூத்திரர்க்குஆம் இயன்ற
சாதி;
ஓதிமன்தன் படைப்புஉயிரே; அரன்மால் செவ்வேள்
உம்பர்கோன் பரிதிமதி மறலி
நீர்க்கோன்
காதல்அள கேசன்முதல் இவ்வி ரண்டாய்க்
கம்முதல்மூ வாறுஒற்றும்
கருதிச் செய்தார்.’