Primary tabs
465
சாதகம், பிள்ளைக்கவி
‘ஆதியின் இலக்கணக் கடல்எனும் பலநூல்கள்
ஆராய்ந்து உணர்ந்த அதனை
ஆசிரி யம்எனும் விருத்தத்தி னாற்கூறுதும்;
அலகுறு சகாப்தம் ஆண்டு
தேதிஉடு ஓரை திங்களும் சாதகன்
திசை சித்ரம் அலங்காரமும்
திரமான கிரகநிலை அறிந்துசொல் சாதகம்;1
செப்பு பிள்ளைக்கவிக்கு2
மாதம்இரு திங்களில் காப்பு, ஐந்து செங்கீரை,
மாதம் ஏழில் தாலமாம்,
வரைநவம் சப்பாணி, முத்தமோ பன்னொன்று,
வாரானை சம்வற்சரம்,
ஓது ஒன்றரை வருடம் இந்துஇரண்டினில் சிற்றில்,
ஒலிபறை முழக்கல் மூன்றில்,
ஊர்இரதம் நாலில் ஆண்பால்; கழங்கு அம்மானை
ஊசல் பெண்பாலதாமே.’
5
பரணி
‘வெம்போர் முகத்துஆயிரம் யானையைக் கொன்ற
வீரனைத் தலைவ னாக
வேண்டிப் புகழ்ந்துபின் கடவுளரை வாழ்த்தலும்
மேல் இளைஞர் கடைதிறப்பு
வண்பாலையில் காளிகோயிலில் காளிதான்
வன்பேய்களோடு ஆடியும்
மற்றும்ஒரு கூளிப்பேய் சொல்கருது தலைவனான்
மாறாத கீர்த்தி பொங்கப