Primary tabs
488
35. கேசாதி பாதம் :
கலி வெண்பாவால் முடி முதல் அடி அளவும் கூறுவது.
36. கைக்கிளை :
ஒருதலைக் காமத்தினை ஐந்து விருத்தத்தால்
கூறுவது, அன்றி.
வெண்பா முப்பத்திரண்டு செய்யுளால்
கூறுவதும் ஆம்.
37. கையறு நிலை :
கணவனொடு மனைவி கழிந்துழி அவர்கட்பட்ட
அழிவுப் பொருள்
எல்லாம் பிறர்க்கு அறிவுறுத்தித் தாம்
இறந்து படாது ஒழிந்த ஆயத்தாரும்பரிசில்
பெறும் விறலியரும் தனிப்படர் உழந்த செயலறு
நிலையைக் கூறுவது.
38. சதகம் :
அகப்பொருள் ஒன்றன் மேலாதல், புறப்பொருள்
ஒன்றன் மேலாதல்
கற்பித்து நூறு செய்யுள் கூறுவது.
39. சாதகம் :
திதிநிலை, வாரநிலை, நாள்மீன்நிலை, யோகநிலை,
கரணநிலை,
ஓரைநிலை, கிரகநிலை, இவ்வேழ்வகை
உறுப்புக்கள் நிலையையும் சோதிட
நூலால் நன்குஉணர்ந்து அவற்றை அமைத்து
அவற்றால் தலைவற்கு உறுவன கூறுவது. மற்றும்
யுகாதியாண்டு முதலியனவும் கொள்க.
40. சின்னப்பூ :
நேரிசை வெண்பாவால் அரசனது சின்னமாகிய
தசாங்கத்தினைச்
சிறப்பித்து விரித்துநூறு, தொண்ணூறு,
எழுபது, ஐம்பது, முப்பது என்னும்எண்படக்
கூறுவது.