இரட்டைமணிமாலை, இணைமணிமாலை,
மும்மணிக் கோவை,
ஒலிஅந்தாதி இருபா இருபஃது பயோதரப்பத்து,
‘மன்இருபான் வெள்ளைகலித் துறைஇ ரட்டை
மணிமாலை; நூறுவெள்ளை அகவற் பாவால்
பின்னர்க்கலித் துறையதுஇணை மணிமா லைப்பேர்;
பேசுஅகவல் வெள்ளைகலித் துறைமுப் பானால்
சொன்னதுமும் மணிக்கோவை; வகுப்பு முப்பான்
சூழ்ஒலிஅந் தாதி;வெள்ளை அகவற் பாவால்
பன்னும்இரு பாஇருபது; இவைஅந் தாதி;
பயோதரம்,கண் உரைத்திடில்அப் பேர்ப்பத்து ஆமால்.’
தசாங்கப்பத்து, சின்னப்பூ, விருத்தலக்கணம்
என்பன.
‘பத்துஇயல்வெண் பாவின்மலை நதிநாடு ஊர்தார்
பரிகளிறு கொடிமுரசு செங்கோல் பாடின்
மெத்துதசாங் கப்பத்தாம்; தசாங்கம் தன்னை
வெண்பாவால் தொண்ணூறுஏழ் பஃது முப்பான்
இத்தகைமை மொழிவதுசின் னப்பூ ஆகும்;
எழில்குடைசெங் கோல்நாடுஊர் வில்வாள் வேல்மா
அத்திதனித் தனிஅகவல் விருத்தம் பத்தால்
அறைவிருத்த இலக்கணமாம்; அமுதச்
சொல்லாய்!’
ஊசல், வருக்கமாலை, மும்மணிமாலை,
‘சொற்கலித்தா ழிசைஅகவல் விருத்தம் ஆதல்
சுற்றமுடன் தாழிசையாய்ச் சொல்வது ஊசல்;
வற்கஉயிர் கசதநப மவ-எட் டின்சூழ்
மருவுஅகவல் வரின்வருக்க மாலை; வெள்ளை
நற்கலியின் துறைஅகவல் அந்தா தித்த
நடைமுப்பான் மும்மணிமா லைப்பேர்; மேலோர்
ஒற்கம்இல்ஆ சிரியவிருத் தத்தைக் கூட்டில்
ஒருநாற்பான் நான்மணிமா லைக்குஎன்று ஓதே.’