அலங்கார பஞ்சகம், அட்டமங்கலம், நவமணிமாலை
‘ஓதும்வெள்ளை கலித்துறைஆ
சிரியம் வஞ்சி
உறுவிருத்தம் வகுப்புஐந்தால் உரைக்கில் அம்ம
கோதில்அலங் காரபஞ்ச கப்பேர்; எட்டுக்
குலவுஅகவல் விருத்தம்உறு தெய்வம் காப்பாம்
ஈதுஅட்ட மங்கலம்;இப் படிஒன் பானால்
ஏத்துநவ மணிமாலை; எப்பாட் டேனும்
தீதில்ஒரு பான்ஒருபா ஒருபஃது என்ப;
செப்புகஇவை நான்கையும்அந் தாதி தன்னால்.’
பல்சந்தமாலை, ஆற்றுப்படை, பாதாதிகேசம்,
கேசாதிபாதம்அங்கமாலை என்பன
‘அகவல்விருத் தம்வகுப்புஆ தல்பத்து ஆதி
அந்தம்நூறு ஆகும்பல் சந்த மாலை;
புகழ்அகவ லால்புலவர் பாணர் கூத்தர்
பொருநர்முத லவர்உரைஆற்று எதிர்ப்பா டாகப்
பகருமதுஆற் றுப்படையாம்; கலிவெண் பாவால்
பாதாதி கேசம்கே சாதி பாதம்
மகிழஉரைத் திடில்அந்தப் பேராம்; அந்த
வகைஉரைக்கின் வெளிவிருத்தத்து அங்க
மாலை.’
மங்கலவள்ளை, மெய்க்கீர்த்தி, புகழ்ச்சிமாலை,
‘மாசில்குல மகளுக்கு வகுப்பு வெண்பா
வருபொருள்ஒன் பான்ஒன்பா னாகப் பாடில்
தேசுஉயர்மங் கலவள்ளை; வேந்தர்க்கு உண்மை
திகழ்கீர்த்தி உரைப்பதுமெய்க் கீர்த்தி; வஞ்சி
பேசுகுணப் பேர்அடுக்கி மடவார்க்கு ஓதில்
பெரும்புகழ்ச்சி மாலை;அப் படிஆண் பாற்கு
மாசுஅகல உரைக்கில்அது நாம மாலை;
வரும்காமம்
ஒருதலைகைக் கிளைய தாகும்.’