Primary tabs
495
78. மங்கலவள்ளை :
உயர்குலத்து உதித்த மடவரலை வெண்பா
ஒன்பதாலும் வகுப்பு
ஒன்பதாலும் பாடுவது.
79. மணிமாலை :
எப்பொருள்மேலும் வெண்பா இருபதும் கலித்துறை
நாற்பதும் விரவி
வருவது.
80. முதுகாஞ்சி :
இளமை கழிந்து அறிவு மிக்கோர் இளமை கழியாத
அறிவில்
மாக்கட்குக் கூறுவதாம்.
81. மும்மணிக்கோவை :
ஆசிரியப்பாவும், வெண்பாவும், நேரசையும்
நிரையசையும் கொண்டு
எழுத்தெண்ணிப் பாடப்படும்
கலித்துறையும் முறையே தொகை முப்பது
பெறஅடுக்கிய அந்தாதித் தொடையால்
பாடுவது
82. மும்மணிமாலை :
வெண்பாவும் கலித்துறையும் அகவலும்
அந்தாதித் தொடையால்
முப்பது பாடுவது.
83. மெய்க்கீர்த்திமாலை
:
சொற்சீரடி
என்னும் கட்டுரைச் செய்யுளால் குலமுறையில்
செய்த
கீர்த்தியைக் கூறுவது.
84. வசந்தமாலை :
தென்றலை வருணித்துப் பாடுவது.