தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirukural-Devaneyan-Tamil Marapurai

அரண்மனைப் பிராமணப் பூசாரியின் துண்டுதலாலும் அவர் தம் பதவியை இழந்திருக்கவேண்டும்.

அதன்பின், அவர் நெடுந்தொலைவிலுள்ள மயிலை சென்று நெசவுத் தொழிலை மேற்கொண்டிருக்கலாம். அல்லாக்கால் ஏலேலசிங்கன் தொடர்பிற்கும், பட்டப்பகலில் நெசவுக்குழலைத்தேட வாசுகியம்மையார் தம் கணவர் சொற்படி விளக்குக்கொண்டுவந்தார் என்னும் கதைக்கும், இடமில்லை.

வாழ்ந்த இடம் : திருவள்ளுவர் முன்பு மதுரையிலும் பின்பு மயிலையிலும் வாழ்ந்ததாகத் தெரிகின்றது. 

அவர் பாண்டி நாட்டில் நீண்டகாலம் வாழ்ந்திராவிடின், ஊருணி, பைய, வாழ்க்கைத்துணை என்னுஞ் சொற்களை ஆண்டிருக்கவும் அண்மையிலுள்ள சேரநாடு சென்று அக்காலத்து நம்பூதிரிப் பிராமணக் கன்னிகையர் சவச்சடங்கையறிந்து.

"பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்க மிருட்டறையி
லேதில் பிணந்தழீஇயற்று. (913)

என்னும் உவமையை அமைத்திருக்கவும் முடியாது.

"இப்பக்க-மாதாநு பங்கி மறுவில் புலச்செந்நாப்
போதார் புனற்கூடற் கச்சு."

என்பதும் ஒருவகையில் திருவள்ளுவரின் மதுரை வாழ்கையை உணர்த்தும்..

சமயம் : ஆரியர் வருமுன்னரே, தமிழர் சமயத்துறையில் தத்தம் அறிவு நிலைக்கேற்ப சிறு தெய்வ வணக்கத்தாரும் பெருந்தேவ வழி பாட்டாரும் கடவுள் மதத்தாரும் ஆக முந்நிலைப்பட்டிருந்தனர்.

இம்மைப்பயனையே அளிப்பனவாகக் கருதப்பெறும் இடத் தெய்வங்களும் பூத்தெய்வங்களும் நடுகல்தெய்வங்களும் சிறு தெய்வங்களாம். இம்யையில் மழையையும் மறுமையில் விண்ணுலக வின்பத்தையும் அளிப்பவனாகக் கருதப்பெற்ற வேந்தன் பெருந்தேவனாம். இம்மையில் இவ்வுலக இன்பத்தோடு மறுமையில் பிறவி நீக்கப்பேரின்பவீட்டையும் அருள்பவனாகக் கருதப்பெற்ற இறைவன் எல்லாவற்றையுங் கடந்துநிற்கும் கடவுளாம். முதற்கண் சிறுதெய்வ வணக்கமாகவிருந்து பின்பு பெருந்தேவ வழிபாடாகவுயர்ந்த சேயியமும் மாலியமும் இறுதியில் முறையே சிவனியம் திருமாலியம் என்னும், வீடுபேற்று மதங்களக வளர்ந்துவிட்டன. ஆயின், கடவுள் மதத்தார் கடவுள் என்னுஞ் சொற்கேற்ப அவ்விரண்
டிற்கும் பொதுவாயிருக்க வேண்டியதாயிற்று.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:06:17(இந்திய நேரம்)