Primary tabs
அவ்வுயிரில் யானொருவ னல்லனோ - வவ்வி
அருகுவது கொண்டிங் கலைவதே னன்னே
வருகுவது தானே வரும்.
தாவி யளந்தோனுந் தாமிருக்க - நாவில்
இழைநக்கி நூனெருடு மேழை யறிவேனோ
குழைநக்கும் பிஞ்ஞகன்றன் கூத்து.
பொய்யொடு களவுமற்றுப் புலன்களை யொடுக்கிக் கொண்டு
உய்யவே புலன்களைந்து முயர்பர வெளியுள் ளாக்கி
வெய்யவன் மதியம் போல விரவுவ ரைய ராவர்.
கானலை வரையுஞ் சுட்டுக் கடுவெளி பரமா நந்தந்
தானெனு மவையி ரண்டுந் தவிர்ந்துதன் வசமுங் கெட்டு
மோனமுங் கடந்தே யப்பான் முடிந்தவர் ஞானி யாவர்.
சாதியிலே தொண்ணூற்றென் பாணாஞ் சாதி
சமயத்திற் பதின்மூன்றஞ் சமய மாகும்
நீதியிலே சிவனுடைய நீதி யாகும்
நிலைமையிலே வேதாந்த நிலைமை யாகும்
ஆதியிலே யெங்களுர் கருவூ ராகும்
அந்தத்திற் போயடைவோம் பேரூர் தன்னில்
சோதியிலே பரஞ்சோதிக் கூட்ட மாகும்
சொல்லுதற்கு மெங்குலஞ்சுக் கிலம தாமே.
அந்தவூர்ச் செய்தி யறியீரோ- அந்தவூர்
முப்பாழும் பாழாய் முடிவிலொரு சூனியமாய்
அப்பாலும் பாழென் றறி.