Primary tabs
உ
தருமையாதீனம்
ஸ்ரீலஸ்ரீ கயிலை சுப்பிரமணிய தேசிக
ஞானசம்பந்த
பரமாசாரிய சுவாமிகள்
ஆசியுரை
ஆல வாயில் உறையுமெம் ஆதியே"
என்பொ டியைந்த தொடர்பு"
"அன்பின் வழியது உயிர்நிலை; அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு"
அன்பி லதனை அறம்"
என்பதனால், அன்பில்லாத உயிர் இறைவனது முனிவிற்கு ஆனாதலை அவர் விளக்கினார். எங்கள் ஆதிபரமாசாரியாரும்,
துன்ப வினையைத் துடைப்பதுண்டாய்"
என்று, "அன்போடு கூடிய அறிவே உயிர்க்குத் துன்பத்தை நீக்கி இன்பத்தைத் தருவதாகும்", என்று அருளிச் செய்தார்.
அன்பு தொடங்குவது உடலோடு தொடர்புடைய சுற்றத்தாரிடத்திலாம். இந்த அன்பு இம்மை மறுமைப் பிறப்புகளில் உடல் நலத்தையே தரும். இப்படித் தொடங்கிய அன்பு, பின்பு உயிர்க்குயிராய்