திருமுதுகுன்றம் - 3255. நடுநாட்டு 9-வது பதி. இங்கு இறைவர்பாற் பெற்ற 12000 
 பொன்னையும் நம்பிகள் திரு மணிமுத்தாற்றினிற் புகவிட்டுத் திருவாரூர்க் குளத்தில் 
 இறைவரருளாற் பெற்று எடுத்தனர்.
 
 
 திருமாற்பேறு - 3349. தொண்டை நாட்டு 13-வது பதி.
  
 
 
 வடதிருமுல்லைவாயில் - 3431. தொண்டை நாட்டு 22-வது பதி.
  
 
 
 திருமேற்றளி - 3344. காஞ்சிபுரத்தில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற தனிக் 
 கோயில். தொண்டை நாட்டு 2-வது பதி.
  
 
 
 திருமூலட்டானம் - (திருவாரூர்) 3279. திருவாரூர்ப் பூங்கோயிலில் புற்றிடங் 
 கொண்ட பெருமான் எழுந்தருளியிருக்கும் இடம்.
  
 
 
 திருமூலதேவ நாயனார் - 3563. (63) நாயன்மார்களுள் ஒருவர். "நம்பிரான் 
 றிருமூலர்" என்று திருத்தொண்டத் தொகையுள் நம்பிகளால் விதந்து போற்றப் பெற்றவர். 
 திருமந்திரமாலை 3000 அருளியவர்.
  
 
 
 திருவதிகை வீரட்டானம் - 3569. நடுநாட்டில் 7வது பதி.
  
 
 
 திருவரத்துறை - 3448. நடுநாட்டில் 1வது பதி.
  
 
 
 திருவல்லம் - 3349. தொண்டை நாட்டில் 10வது பதி.
  
 
 
 திருவன்பார்த்தான் பனங்காட்டூர் - 3347. தொண்டை நாட்டு 9வது பதி.
  
 
 
 திருவாத்தி - 3700. திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத் திருக்கோயிலினுள் 
 உத்தராபதியார்எழுந்தருளிய ஆத்திமரம்.
  
 
 
 திருவாமாத்தூர் - 3446. நடுநாட்டு 21-வது பதி.
  
 
 
 திருவாரூர் - 3262. சோழ நாட்டுப் பெரும் பதி. ஆளுடைய நம்பிகளுக்குப் பெருக 
 அருளிய பதி.
  
 
 
 திருவூறல் - 3437. தொண்டை நாட்டு 12வது பதி.
  
 
 
 திருவெஞ்சமாக்கூடல் - 3246. கொங்கு நாட்டில் தேவாரப் பாடல்பெற்ற பதிகளுள் 
 ஒன்று. வெஞ்சன் என்ற சிற்றரசன் ஆண்டதனால் இப் பெயர்பெற்றது. 
  
 
 
 திருவெண்காட்டு நங்கையார் - 3676. சிறுத்தொண்டநாயனாரின் தேவியார்.
  
 
 
 திருவெண்ணெய் நல்லூர் - 3338. ஆளுடைய நம்பிகளை இறைவர்ஓலைகாட்டி வழக்கிட்டு 
 ஆளாகக் கொண்ட பதி. நடுநாட்டில் 14வது பதி.
  
 
 
 திருவெண்பாக்கம் - 3432. தொண்டை நாட்டில் 17வது பதி. நம்பிகளுக்கு இறைவர் 
 ஊன்றுகோ லருளிய பதி. இத்தலம் இப்போது பாண்டி (பூண்டி) நீர்த்தேக்க ஏரியினுள் அமிழ்ந்துள்ளது.
  
 
 
 திருவேற்காட்டூர் - 3671. தொண்டை நாட்டு 23வது பதி. மூர்க்கநாயனாரது பதி.
  
 
 
 திருவெற்றியூர் - 3353. தொண்டை நாட்டு 20வது. பதி. புவியுட் சிவலோகம் 
 போல்வது.
  
 
 
 நிதிக்கோமான் - 3168. குபேரன்.
  
 
 
 பரவையார் - 3280. ஆளுடைய நம்பிகளின் தேவிமா ரிருவருள் முதல்வர்.
  
 
 
 பழையனூர்த் திருவாலங்காடு - 3436. தொண்டை நாட்டு 15வது பதி. 
  
 
 
 புலியூர் (தில்லை) 3264. சிதம்பரம்.
  
 
 
 பூங்கோயில் - 3602. திருவாரூரில் இறைவரது கோயிலின் பெயர்.
  
 
 
 பொதியமலை - 3565. தென்றிசையில் அகத்திய மாமுனிவர் எழுந்தருளியிருக்கும் 
 மலை. தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று.
  
 
 
 மூர்க்கநாயனார் - 3617. (63) நாயன்மார்களுள் ஒருவர்.