அணீயாரூர் மணிப்புற்று - 3294. திருவாரூரில் திருலமூட்டானத்துள் புற்று வடிவாகிய
திருமேனியினுள் இறைவர்எழுந்தருளி விளங்கும் இடம்.
அநிந்திதையார் - 3360. கயிலையில் உமையம்மையாரின் சேடியர் இருவருள் ஒருவர்;
ஆளுடைய நம்பிகளாகிய ஆலாலசுந்தரரின் பொருட்டு இவ்வுலகில் வந்து அவதரித்துச், சங்கிலியார்
என்ற திருநாமத்துடன் வளர்ந்து, திருவொற்றியூரில் அவரை மணந்து கொண்டவர்.
அவிமுத்தம் - 3567. ஸ்ரீகாசி.
ஆலக்கோயில் - 3328. திருக்கச்சூரில் இறைவரது கோயிலின் பெயர்.
உத்தராபதியரர் - 3705. சிறுத்தொண்டரது அன்பு நுகர்ந்து, அவருக்கு அருளும்
பொருட்டு வயிரவத் திருவேடம் தாங்கி வந்த இறைவர்.
உடைய அரசு - 3304. திருநாவுக்கரசு நாயனார்; சைவசமய பரமாசாரியர்கள் நால்வருள்
ஒருவர்.
ஏயர்கோக்குடி - 3159. ஏயர்கோன் கலிக்காம நாயனார்அவதரித்த குடி.
ஓணகாந்தன்றளி - 3345. காஞ்சிபுரத்தில் தேவாரப் பாடல் பெற்ற தனிக்கோயில்.
ஓணன் காந்தன் என்ற இருவர்பூசித்த இரண்டு தனிக்கோயில்களுடையது. தொண்டை நாட்டு 3-வது
பதி.
கச்சி அனேகதங்காபதம் - 3346. காஞ்சிபுரத்தில் தேவாரப் பாடல் பெற்ற தனிக்கோயில்.விநாயகப்
பெருமான் பூசித்த பதி. (அனேகதம் - யானை) தொண்டை நாட்டு 4-வது பதி.
கணபதீச்சுரம் - 3700. திருச்செங்காட்டங் குடியில் இறைவரது திருக்கோயிலின் பெயர்.
கணபதி பூசித்தது.
கண்ணப்பர் - 3350. (63) நாயன்மார்களுள் ஒருவர்.
கம்பையாறு - 3242. காஞ்சிபுரத்தில் உள்ள ஆறு. இதன் கரையில் அம்மையார்தவஞ் செய்து சிவபூசை செய்தனர்.
குண்டையூர்கிழவர் - (கிழார்) 3164. ஆளுடைய நம்பிகளின் தொண்டனாராகிய
வேளாளர்.
கொகுடிக் கோயில் - 3271. திருக்கருப்பறியலூரின் கோயிலின் பெயர்;
கோயிலின் அமைப்புப் பற்றிப் போந்த பெயர்என்பர். கொகுடி ஒருவகை முல்லை விசேடம்.
கோட்புலியார் - 3185. ஆளுடைய நம்பிகளின் தொண்டராகிய வேளாளர். திருநாட்டியத்தான்
குடியில் வாழ்ந்தவர். வனப்பகையார் சிங்கடியார் என்ற இரண்டு அம்மையரைப் பெற்றெடுத்த
தந்தையார். அரசர்சேனாதிபதியார்.
சங்கிலியார் - 3380. ஆளுடைய நம்பிகளின் தேவிமா ரிருவருள் இரண்டாவதவர்.