Primary tabs
காப்பு
தேமே வியசதகம் செப்பவே - கோமேவிக்
காக்கும் சரணவத்தான் கம்பகும்பத் தைந்துகரக்
காக்குஞ் சரவணத்தான் காப்பு.
புவியிலே சிறப்புற்ற திருப்புல்வயலில் எழுந்தருளிய குமரக் கடவுள்பால்,
தேமேவிய சதகம் செப்ப - இனிமை பொருந்திய சதகத்தைக் கூற,
கோமேவிக் காக்கும் சரவணத்தான் - தலைமையாக இருந்து காப்பாற்றும்
சரவணத்திலே தோன்றிய முருகனும், கம்பம் - (அடியவருடைய
அன்பாகிய) கட்டுத்தறியிலே பிணிப்புண்ட, கும்பத்து ஐந்துகரம் கா
குஞ்சரவணத்தான் - குடம் போன்ற மத்தகத்தினையும் ஐந்து
திருக்கைகளையும் உடைய, காட்டில் உறையும் யானையின்
வடிவத்தையுடைய மூத்த பிள்ளையாரும், காப்பு - காவலாகும்.
(விளக்கவுரை.)
புல்லை-திருப்புல் வயல் (மரூஉ). ஒரு சொல்
தன் வடிவம் திரிந்து மருவி வருவது மரூஉ. மருவுதல் -
பல நாள்
பழகி வருதல். சென்னைப்பட்டினம் என்பது சென்னை
எனவும்,
கோயம்புத்தூர் கோவையெனவும், பூவிருந்தவல்லி
பூவையெனவும்
வருவனவும் மரூஉ ஆகும்.
(கருத்து)குமரேச
சதகத்தினைப் பாடுதற்கு மூத்த பிள்ளையாரும்
(விநாயகரும்) முருகனும் அருள் புரிவார்கள்.
(வடசொல்)
குமரன் - இளையோன், ஈசன் - தலைவன், சர
வணம்
- நாணல். கரம்-கை. குஞ்சரம் - யானை,
வணம்
(வர்ணம்) - வடிவு (அழகு).