Primary tabs
க்ஷத்திரியனுக்கும் நாவிதனுக்கும் சிலேடை
வடிகத்தி யத்த மருவி - படிபுகழச்
சத்திரம்வைத் துள்ள தரத்தால்ரா மையாகேள்
சத்திரிய நேர்நாவி தன்.
ஓலைச் சுவடிக்கும் ஓணாணுக்கும்
பெரியதலை கால்கொம்பைப் பெற்று - மருவுதலால்
கோணாம லேயுதவு கொப்பணவே ளேசுவடி
யோணாநே ராமென் றுணர்.
நீர்ப்பாசன நன்னில நிதியம் நேருஞ் சாவு வாழ்வுகளிற்
பார்ப்பார்க் களித்தோர் பேறெங்கே பார்த்தோம் புலவர்க்
கிழிபழங்கூழ்
வார்ப்பா ரேனும் பூமியுள வரையும் புகழ்ச்சி யோங்குமெனும்
நேர்ப்பாக் கற்றோர்க் குதவுதமிழ் நேயாவாணூர்ச்சர்க்கரையே
விமணம ளாவுசிறு காலறுகா லுழுதாது மென்றூட்டூவ
வீமணவி ழாவிழைபூம் பொழிறிகழுஞ் செங்கோட்டின் மேவிவீர
வீமணவோ வணனருளாற் பகைநூறி நிமிடகவி விளம்பவல்ல
வீமணநா வலநினது சல்லாப மொழியமுது விரும்பினேனே.
திருச்செங்கோடு வீமணக் கவிராயர் கூறியது
வளையவணங் கப்புலவி நீங்குவன வயல்விஜய மங்கையோங்கு
இளையசந் திரப்பிரப நாயகரை யேத்திமனத் திடரை யெல்லாம்
களையவரு கார்மேகக் கவியரசே வந்தனனிற் காண வென்றே.
திருச்செங்கோடு