Primary tabs
xxv
உ
சிவமயம்
கொங்கு மண்டல சதக உரையாசிரியர் இயற்றியன
விநாயகர் காப்பு
கலிவிருத்தம்
கற்பு நீடு கனிமணந் தீன்றவோர்
வெற்பு நீடு மிளிர்களிற் றின்சரன்
அற்பு நீடு மகத்து ணிறுத்துவாம்.
அர்த்த நாரீச்சுரர் துதி
அறுசீரடியாசிரிய விருத்தம்
யெதினும் பொருந்தா திசைக்குமறைச்
சொல்லாய்ப் பொருளாய்ச் சொலாநிலையாய்த்
துரிசற் றவர்த மனத்தினன்றி
நில்லாப் பிழம்பா யிருசாய
னிலவி யமுதி னொருவடிவாய்
நல்லா ளிடத்து விளங்குமர்த்த
நாரிப்பரனை வணங்குவமால்.
சுப்பிரமணியர் துதி
வேறு
புழுத்தன யனைய ரேனும் புண்ணியா முருகா வென்று
வழுத்துவோர் துயர மேக வான்மழை பொழிதன் மான
பழுத்தநல் வரத்தை யூற்றும் பணிகிரி குகனை யுள்வாம்.