Primary tabs
என அந்தப் பொய்ம்மாயப் புலைமகளிரால் விளையும் கேட்டையும் எத்துணை நயம்பட எடுத்தோதுகின்றார் காண்மின். இவ்வாறு பரத்தையர் திறம் பேசும்போது இவர்தம் ஆசிரியராகிய சிவஞான முனிவர் செய்யுள் ஒன்றும் நம் நினைவிலெழுகின்றது; அது வருமாறு :
என்பர் அப் பெரியார். இதன்கண் சிவசிவ என்று இவர் இரங்கும் சொற்கள் நம்முள்ளத்தைத் தொடுகின்றன. ஆயினும் மறைக் கிழவனும் மாயனும் தாணும் எங்குப் பரத்தை மாதர் கண்வலைப் பட்டார் ? இது நிற்க.
இனி, சிவ! சிவ! இத்தணிகைநகர்க் கவர்மனப் பரத்தை மாதர் சேரியில் யாம் நிற்றலும் தீதேயாம். விரைந்து இந்நகர் அங்காடித் தெருவை யணுகுவோம். இந்த அங்காடித் தெரு வணிகர் நந்தண்டமிழ் நாட்டில் சங்ககாலத்திலே வாழ்ந்த வணிகப் பெருங்குடி மக்கள் வழித்தோன்றல்கள் என்பதில் ஐயம் சிறிதுமில்லை. எற்றாலெனின், நம் பழைய வணிகப் பெருங்குடி மக்கள்,
(பட்டின - 207 - 19)
பண்புடையோரல்லரோ ! அவர்தம் பெருந்தகைமையை யாம் பட்டினப்பாலையிற் பார்த்து மகிழ்ந்திருக்கின்றோமல்லமோ ? இக் கச்சியப்பர் திருத்தணிகையினும் அந்தப் பெருந்தகை வணிகரே வாணிகஞ் செய்கின்றனர். என்னை ? இங்கும்,
(திருநகரம் - 88)