தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1172


வரையார். 

இச்  சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இது  திணை  வழுவாமை
யுணர்த்துதல் நுதலிற்று. 

உரை:  தன்மைச்  சொல்லும்,  அஃறிணைச்   சொல்லும்  அவை
எண்ணுமிடத்து விராஅய் வரப் பெறும் எனக் கொள்க என்றவாறு. 

‘தன்மைச்சொல்’ எனவே, உயர்திணைச் சொல் எனப் பெறும். 

வரலாறு: ‘யானும் என் எஃகமுஞ் சாறும்’ -- என வரும். 

‘மருங்கு’ என்ற மிகையான், ‘நீயும் நின்  படைக்கலமுஞ் சாறிர்’ --
‘அவனும் தன் படைக்கலமுஞ் சாறும்’ எனவும் வருதல் கொள்க. (43) 

44. ஒருமை யெண்ணின் பொதுப்பிரி பாற்சொல்
ஒருமைக் கல்ல தெண்ணுமுறை நில்லாது.
 

இச்   சூத்திரம்    என்னுதலிற்றோ    வெனின்,   மரபுவழுக்காத்தல்
நுதலிற்று. 

உரை: ஒருமை எண்ணின் பொதுப் பிரி பாற் சொல் என்பது -- ஓர்
எண்ணாய், இரண்டுபாற்கும் பொதுவாய், ஒருவன் ஒருத்தி எனப்பிரிந்து
நின்று,   பால்  வேறுபடுவதாயிற்று;  அஃது  யாதோவெனின்,  ஒருவர்
என்பது.  அஃது  இருபாற்கும்  பொதுவாய்  நிற்பினும். ஒருவர் இருவர்
என்று எண்ணும்பொழுதாயின் ஒரு பாற்கே உரித்தாம் என்பது. 

அப்  பொதுமையிற் பிரிந்த பாற் சொல் ஒருவன் ஒருத்தி என்பது:
அவை  தத்தம் ஒருமை விளங்கி நிற்குந்துணை யல்லது அப்பால்மேல்
எண்ணுமுறை யோடா என்பது. (44) 

இனி, எண்ணுதல் களைந்து, ‘ஒருவர்’  என்றக்கால்  இருபாலையும்
தழீஇ நிற்கும்; இதுவும் ஒருசார் ஆசிரியர் உரைப்ப. 

இனி, ஒருமை எண்ணின் பொது என்ப ஒருவர் என்பது:

45.  வியங்கோ ளெண்ணுப்பெயர் திணைவிரவு வரையார். 

இச்   சூத்திரம்  என்னுதலிற்றோ  வெனின்,  இதுவும்  திணை  வழுக்
காத்தல் நுதலிற்று. 

உரை:  வியங்கோளுடைய  எண்ணுப்  பெயர்  திணை  விரவுதல்
கடியப்படா என்றவாறு. 

வரலாறு:  ‘ஆவும்  ஆயனும்   செல்க’   என   வரும்.   இஃது
இனமல்லதனோடு எண்ணினமையின் வழு
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:15:14(இந்திய நேரம்)