Primary tabs

லை யுரைத்தல் வினாவிற் கேற்றல்
பண்புகொள வருதல் பெயர்கொள வருதலென்று
அன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே.
இஃது அவ்வெழுவாய் ஆறு பயனிலையும் ஏற்கும் என்கின்றது.
(இ-ள்.) பொருண்மை சுட்டல் - ஒரு பொருளினது பண்பு முதலியன
சுட்டாது அப்பொருட்டன்மையது உண்மைத்தன்மையே சுட்டி நிற்க
வருதல், வியங்கொள வருதல்- தான் ஏவலைக் கொள்ள வருதல், வினை
நிலை உரைத்தல் - தனது தொழிலினைச் சொல்ல வருதல், வினாவிற்கு
ஏற்றல்-தான் வினாவிற்குப் பொருந்தி
வருதல், பண்பு கொள வருதல்
-தனது பண்பினைத் தான் கொள்ள வருதல், பெயர் கொள வருதல்
-தான் பெயரைக் கொண்டு முடிய வருதல், என்று அன்றி அனைத்தும்
-என்று சொல்லப் பட்ட அவ்வனைத்து வரவும், பெயர்ப்பயனிலையே -
அவ்வெழுவாய் வேற்றுமையது பயனாகிய நிலைமை, எ-று.
தன்னை முடித்தற்குப் பின் வருஞ் சொல்லின் பொருண்மையைத்
தான் அவாவிநிற்கும் நிலை வேறுபாட்டைப் பயனிலை என்றார்.
(எ-டு.) ஆ உண்டு, ஆ செல்க, ஆ கிடந்தது, ஆ யாது? ஆ
எவன்? ஆ கரிது, ஆ பல என வரும்.
‘தன்னினம் முடித்தல்’ என்பதனான், ஆ இல்லை, ஆ அல்ல என
வினைக்குறிப்பும் கொள்க.
‘பொருள்’ என்னாது ‘பொருண்மை’ என்றார், அப்பொருளினது தன்