தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2398


ணையாகிய  அரசனையாயினுந் தன் படைத்தலைவரையாயினும் ஏவி
அகத்து   வேந்தர்க்குத்   துணையாகிய  அரசனது  முழு  முதலரண்
முற்றிலும்  அவன்றா  னதனைக்  காவல் கோடலும் நிகழ்ந்தவிடத்தும்
இவ் விருநான்கு வகையும் இருவர்க்கு முளவாதலாம்.

உதாரணம்  முற்காட்டியவே;  வேறு  வேறு  காட்டினும் அமையும்.
இத்திணைக்குப்     ‘படையியங்கரவ’    (புறம்.8)     முதலியனவும்
அதிகாரத்தாற் கொள்க. அது,

‘‘இலங்குதொடி மருப்பிற் கடாஅம் வார்த்து
நிலம்புடையூஉ வெழுதரும் வலம்படு குஞ்சர
மெரியவிழ்ந் தன்ன விரியுளை சூட்டிக்
கால்கிளர்ந் தன்ன கடுஞ்செல லிவுளி
கோன்முனைக் கொடியினம் விரவா வல்லோ
டூன்வினை கடுக்குந் தோன்றல பெரிதெழுந்
தருவியி னொலிக்கும் வரிபுனை நெடுந்தேர்
கண்விட் டனவே முரசங் கண்ணுற்றுக்
கதித்தெழு மாதிரங் கல்லென வொலிப்பக்
கறங்கிசை வயிரொடு வலம்புரி யார்ப்ப
நெடுமதி னிரைஞாயிற்
கடிமிளைக் குண்டுகிடங்கின்
மீப்புடை யாரரண் காப்புடைத் தேஎ
நெஞ்சுபுக லழிந்து நிலைதளர் பொரீஇ
யொல்லா மன்னர் நடுங்க
நல்ல மன்றவிவண் வீங்கிய செலவே’’     (பதிற்றுப்பத்து)

என வரும்.

இனித்    தேவர்க்குரியவாக    உழிஞையிற்றுறைகள்     பலவுங்
கூறுவாருளராலெனின்,     அவை     உலகியலாகிய    அரசியலாய்
எஞ்ஞான்றும்  நிகழ்வின்றி ஒருகால் ஒருவர் வேண்டியவாறு செய்வன
வாகலின் ‘தமிழ் கூறு நல்லுலகத்’தன  (தொல்.பாயிரம்) அல்லவென
மறுக்க.  இனி  முரசழிஞை  வேண்டுவா  ருளரெனின் முரசவஞ்சியுங்
கோடல் வேண்டுமென மறுக்க.

இனி ஆரெயிலுழிஞை முழுமுதலரணம் என்றதன்கண் அடங்கும்.

இனி  இவற்றின் விகற்பிப்பன வெல்லாம் அத் துறைப்பாற்படுத்திக்
கொள்க.

உழிஞை வேந்தர் இருவர்க்கும் பொதுவாம் துறைகள்
 

68.
குடையும் வாளு நாள்கோ ளன்றி
மடையமை யேணிமிசை மயக்கமுங் கடைஇச்
சுற்றம ரொழிய வென்று கைக்கொண்டு
முற்றிய முதிர்வு மன்றி முற்றிய
அகத்தோன் வீழ்ந்த நொச்சியு மற்றதன்
புறத்தோன் வீழ்ந்த புதுமை யானும்
நீர்ச்செரு வீழ்ந்த பாசியு மதாஅன்று
ஊர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறனும்
அகமிசைக் கிவர்ந்தோன் பக்கமும் இகன்மதிற்
குடுமி கொண்ட மண்ணுமங் கலமும்
வென்ற வாளின் மண்ணோ டொன்றத்
தொகைநிலை யென்னுந் துறையொடு தொகைஇ
வகைநான் மூன்றே துறையென மொழிப.
 

இஃது    எய்தாத       தெய்துவித்தது;     உழிஞைத்திணையுள்
இருபெருவேந்தர்க்கும்  ஒன்றாய்ச்  சென்று  உரியவான துறை இதற்கு
முன்னர்க் கூறாமையின்.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 23:15:46(இந்திய நேரம்)