Primary tabs

திறத்தானும் -
உண்மைப் பொருளிடத்தும் அதற்கேற்ற ஒழுக்கத்
திடத்துங் கூறுபடுத்துக் கூறிய நூல்களாற் பெறும் பயனைக் கருதிய
ஒரு கூற்றின் கண்ணும்;
என்றது,
வீடுபேற்றிற்கு உதவியாகிய நூல்களை ஓதற்குப் பிரிவுழியு
மென்றதாம்.
இதற்குத் தலைவன் கூற்றாக உதாரணம் வருவன
உளவேற் கொள்க.
புகழும் மானமும் எடுத்து வற்புறுத்துலும் - போகம் வேண்டிப்
பொதுச்சொற் பொறுத்தல்
(புறம்.8) அரசியலன்றாதலிற் றமக்கேற்ற
புகழும் பெருமையும்
எடுத்துக்காட்டி இதனாற் பிரிது மெனத்
தலைவியையுந் தோழியையும் வற்புறுத்தற்கண்ணும்;
இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க.
தூது
இடையிட்ட வகையினானும் - இருபெரு வேந்தர் பொருவது
குறித்துழி இருவரையுஞ்
சந்து செய்வித்தற்பொருட்குக் கூட்டத்திற்கு
இடையிட்ட பிரிதற் பகுதிக்கண்ணும்:
ஒருவனுழை ஒருவன் மாற்றங்கொண் டுரைத்தலிற் றூதாயிற்று.
‘வகை’யென்றார், வணிகரின் அரசர்க்கும் அரசரின் அந்தணர்க்குந்
தூது சிறந்ததென்றற்கும், குறுநிலமன்னர்க்குப் பெரும் பான்மை
யென்றற்கும், வேந்தர்தம்மின் இழிந்தாருழைத்
தூதுசேறல்
உரித்தன்றென்றற்கும். இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க.
ஆகித்
தோன்றும் பாங்கோர் பாங்கினும்- தனக்கு ஆக்கஞ் சிறந்த
நட்புடையோராகித் தோன்றும் நட்புடையோர்க்கு
உற்றுழி உதவச்
சேறற்கண்ணும்;
இதற்கு
‘‘மலைமிசைக் குலைஇய’’ (அகம்.84) என்பதூஉம்
‘‘இருபெரு
வேந்தர் மாறுகொள்’’(அகம்.174) என்பதூஉம் முன்னர்க்
காட்டினாம். (சூ.24.உரை) அவற்றை உதாரணமாகக் கூறிக்கொள்க.
மூன்றன்
பகுதியும்- அறத்தினாற் பொருளாக்கி அப்பொருளாற்
காமநுகர்வலென்று பிரிதற்கண்ணும்;