தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3249


மண்டிலத்து    அருமையும்   -   அங்ஙனம்  பொருள்  வருவாய்க்கு
ஏதுவாகிய வேற்றுப் புலங்களின் அருமை கூறிப் பிரிதற்கண்ணும்;

இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க.

தோன்றல்     சான்ற மாற்றோர் மேன்மையும் - தோற்றஞ் சான்ற
புகழினராகிய     வேற்று    வேந்தர்தமது    மீக்கூற்றங்    கருதிப்
பிரிதற்கண்ணும்;

இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க.

‘தோன்றல்  சான்ற’  என்றதனாற் றெவ்வர் தன்னின் மிக்காரெனக்
கேட்டுழி     அழுக்காறு   தோன்றலின்,     அதுவும்    பிரிதற்கு
ஏதுவாமென்றுணர்க. இஃது அரசர்க்கே யுரித்து.

பாசறைப்  புலம்பலும்  - தலைவன் பாசறைக்கண் இருந்து தனக்கு
வெற்றி  தோன்றிய காலத்துந் தான் அவட்குக் கூறிப் போந்த பருவம்
வந்துழியுந்  தூது  கண்டுழியும்  அவள்  வருந்துவளென நினைத்துத்
தனிமை கூறும் இடத்தும்;

இதனைக்  ‘கிழவி  நிலையே’  (தொல். பொ. கற். 45) என்னுஞ்
சூத்திரத்தான்  விலக்குவரெனின், அதற்கு  உம்மை  விரித்துக் கிழவி
நிலையை  வினைசெய்யாநிற்றலாகிய இடத்து நினைந்து கூறினானாகக்
கூறார்; வெற்றி நிகழுமிடத்துந் தான் குறித்த பருவம் வந்துழியுந் தூது
கண்டுழியும்   வருத்தம்    விளங்கிக்    கூற்றுத்   தோன்றுமென்று
பொருளாமென்றுணர்க.

முடிந்த  காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திற் வகையினும்
-வகையின்  வினைத்திறமுமென மாற்றுக. வேந்தன் எடுத்துக் கொண்ட
வினை முடிந்த காலத்துத் தான் போக்கொருப்பட்டு நின்று பாகனொடு
விரும்பிக்    கூறிய     வகையின்கட்     டோன்றிய    வேறொரு
வினைத்திறத்திடத்தும்;

என்றது, அரசனுக்குப் பின்னும் ஒரு பகை
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 01:55:44(இந்திய நேரம்)