Primary tabs


காலத்தே; தலைவைத்த - அந்த வாற்றாமையின் இகந்தவாக முடிவிலே
வைக்கப்பட்ட மெய்ப்பாடுகள்; மிகுதியோடு மடனே வருத்தம் மருட்கை
நாற்பொருட் கண்நிகழும் - தன் வனப்புமிகுதியுடனே மடப்பமும்
ஆற்றாமையும் வியப்புமாகிய நான்குபொருட்கண்ணே நடக்கும்; அவை
இறந்தபோலக் கிளக்குங்கிளவி என்ப - அங்ஙனம் அவை நடக்கின்ற
நான்கு பொருளுங் கூற்றுநிகழுங்கால் தன்னைக் கைகடந்தன போலக்
கூறுங் கூற்றாய் நிகழுமென்று கூறுவர் புலவர் எ-று.
தலைவைத்த மெய்ப்பாடாவன - ஆறாமவதியினும் இகப்பத்
தோன்றுதற்குரிய மெய்ப்பாடுகளாகி மன்றத்திருந்த சான்றோரறியத்
தன்றுணைவன் பெயரும் பெற்றியும் அவனொடு புணர்ந்தமையுந்
தோன்றக்கூறியும் அழுதும் அரற்றியும் பொழுதொடு புலம்பியும் ஞாயிறு
முதலியவற்றொடு கூறத்தகாதன கூறலும் பிறவுமாம்.
உ-ம்:
“புரிவுண்ட புணர்ச்சியுட் புல்லாரா மாத்திரை
அருகுவித் தொருவரை அகற்றலின் தெரிவார்கண்
செயநின்ற பண்ணினுள் செவிசுவை கொள்ளாது
நயநின்ற பொருள் கெடப் புரியறு நரம்பினும்
பயனின்று மன்றம்ம காமம் இவள்மன்னும்
ஒண்ணுதல் ஆயத்தார் ஓராங்குத் திளைப்பினும்
முள்நுனை தோன்றாமை முறுவல்கொண் டடக்கித்தன்
கண்ணினு முகத்தினு நகுபவள் பெண்ணின்றி
யாவருந் தண்குரல் கேட்ப நிரைவெண்பல்
மீயுயர் தோன்ற நகாஅ நக்காங்கே
பூவுயிர்த் தன்ன புகழ்சால் எழிலுண்கண்
ஆயிதழ் மல்க வழும்;
ஓஓ, அழிதகப் பாராதே அல்லல் குறுகினம்
காண்பாங் கனங்குழை பண்பு;
என்று, எல்லீரு மென்செய்தீர் என்னை நகுதிரோ
நல்ல நகாஅலிர் மற்கொலோ யானுற்ற
அல்ல லுறீஇயான் மாய மலர்மார்பு
புல்லிப் புணரப் பெறின்;
எல்லாநீ, உற்ற தெவனோமற் றென்றீரேல் எற்சிதை
செய்தான் இவனென வுற்ற திதுவென
வெய்த வுரைக்கும் உரனகத் துண்டாயின்
பைதல வாகிப் பசக்குவ மன்னோவென்
நெய்தன் மலரன்ன கண்;
கோடுவாய் கூடாப் பிறையைப் பிறிதொன்று
நாடுவேன் கண்டனென் சிற்றிலுட் கண்டாங்கே
ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய
காணான் திரிதருங் கொல்லோ மணிமிடற்று
மாண்மலர்க் கொன்றை யவன்;
தெள்ளியேம் என்றுரைத்துத் தேராது ஒருநிலையே
வள்ளியை யாகென நெஞ்சை வலியுறீஇ
உள்ளி வருகுவர் கொல்லோ உளைந்தியான்
எள்ளி யிருக்குவென் மற்கொலோ நல்லிருண்
மாந்தர் கடிகொண்ட கங்குல் கனவினால்
தோன்றின னாகத் தொடுத்தேன்மன் யான் தன்னைப்
பையெனக் காண்கு விழிப்பயான் பற்றிய
கையுளே மாய்ந்தான் கரந்து;
கதிர்பகா ஞாயிறே கல்சேர்தி யாயின்
அவரை நினைத்து நிறுத்தென்கை நீட்டித்
தருகுவை யாயின் தவிருமென் நெஞ்சத்
துயிர்திரியா மாட்டிய தீ;
மையில் சுடரே மலைசேர்தி நீயாயின்
பௌவநீர்த் தோன்றிப் பகல்செய்யு மாத்திரை
கைவிளக் காகக் கதிர்சில தாராயென்
தொய்யில் சிதைத்தானைத் தேர்கு;
சிதைத்தானைச் செய்வ தெவன்கொலோ எம்மை
நயந்து நலஞ்சிதைத் தான்;
மன்றப் பனைமேன் மலை