தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   262


     

    கடுவளி யெடுப்ப
    வெண்முகிற் பிறழு மின்னென நுடங்கித்
    தன்னொளி சுடருந் தையலை யவ்வழிக்
    குறுஞ்சினைப் புன்னை நறுந்தா தாடிக்
    கருங்குயிற் சேவ றன்னிறங் கரந்தெனக்
    குன்றிச் செங்க ணின்றுணைப் பேடை
    உணர்தல் செல்லா தகறொறும் விரும்பிப்
    புணர்த லுணர்வொடு பொங்குசிறை யுளரி
    அளிக்குர லழைஇத் தெளித்துமன நெகிழ்க்குமக்
    குயிற்புணர் மகிழ்ச்சி யயிற்கூட் டமைத்த
    செஞ்சுடர் வேலி னெஞ்சிடம் போழத்
    தன்ஞாழ் நவிற்றிய தாமரை யங்கைப்
    பொன்ஞாண் டுயல்வரும் பொங்கிள வனமுலை
    மனைப்பெருங் கிழத்தியை நினைத்தன னாகிச்
    செம்மை நெடுங்கண் வெம்மை யறாஅத்
    தெண்பனி யுறைத்தரத் திருத்துஞ் சகலத்துப்
    பொன்பூத்தன்ன வம்பூம் பசப்பொடு
    நாண்மலர்ப் புன்னைத் தாண்முதல் பொருந்திக்
    கொடிக்குருக் கத்திக் கோலச் செந்தளிர்
    பிடித்த விரலின னாகிக் கெடுத்த
    அவந்திகை மாத ரணிநல நசைஇக்
    கவன்றன னிருந்த காலை யகன்று
    போமின் போமி னென்றுபுடை யோட்டும்
    காவ லாளரைக் கண்டிவட் புகுதரும்
    உரிமை யுண்டென வரிமா னன்ன
    வெஞ்சின விடலை நெஞ்சுநிறை துயரமொடு
    நீக்கச் சென்றனெ னெருந லின்றிவண்
    நீக்கப் பட்டனெ னாதலி னிலையா
    ஆக்கமுங் கேடும் யாக்கை சார்வா
    ஆழிக் காலிற் கீழ்மேல் வருதல்
    வாய்மை யாமென மனத்தி னினைஇ
    நீங்கிய வெழுந்தோன் பூங்குழை மாதரை
    வண்ணக் கஞ்சிகை வளிமுகந் தெடுத்துழிக்
    கண்ணுறக் கண்டே தன்னமர் காதல்
    மானேர் நோக்கின் வாசவ தத்தை
    தானே யிவளெனத் தான்றெரிந் துணரான்
    மந்திர விதியி னந்த ணாளன்
    தந்தனன் மீட்டெனுஞ் சிந்தைய னாகி
    உறுப்பினு நிறத்தினும் வேற்றுமை யின்மையின்
    மறுத்து நோக்கு மறத்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:54:57(இந்திய நேரம்)