தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   263


     

    தகை மன்னன்
    செஞ்சுடர் முகத்தே செருமீக் கூரிய
    வெஞ்சின வேந்தர்க்கு நஞ்சுமிழ் நாகத்துத்
    தீயோ ரன்ன திறல வாகி
    முளையேர் முறுவன் முகிழ்த்த சின்னகை
    இளையோர் நெஞ்சிற் றளைமுதல் பரிந்தவர்க்
    கமிழ்தம் பொதிந்த வருளின வாகித்
    தலைப்பெருந் தாமரைச் செம்மல ரன்ன
    நலத்தொடு புணர்ந்த விலக்கண நெடுங்கண்
    வயப்பட லுற்று வயங்கிழை மாதர்
    தானுங் கதுமென நேர்முக நோக்க
    நெஞ்சிறை கொளீஇய நிறையமை நெடுந்தாழ்
    வெந்தொழிற் காம வேட்கை திறப்பத்
    திண்பொறி கலங்கித் திறல்வே றாகி
    வேலை யெல்லைமீதூர்ந் திரண்டு
    கோலப் பெருங்கடல் கூடி யாங்கும்
    இசைந்த வனப்பி னேயர் மகற்கும்
    பசைந்த காதற் பதுமா பதிக்கும்
    யாப்புறு பால்வகை நீப்புற வின்றிப்
    பிறப்புவழிக் கேண்மையிற் சிறப்புவழி வந்த
    காமப் பெருங்கடல் கண்ணுறக் கலங்கி
    நிறைமதி யெல்லைத் துறையிகந் தூர்தர
    நன்னகர் கொண்ட தன்னமர் விழவினுட்
    கரும்புடைச் செல்வன் விரும்புபு தோன்றித்
    தன்னலங் கதுமெனக் காட்டி யென்னகத்
    திருநிறை யளத்தல் கருதிய தொன்றுகொல்
    அந்தண வடிவொடு வந்திவட்டோன்றி
    மேவன நுகர்தற்கு மாயைபி னிழிதரும்
    தேவ குமரன் கொல்லிவன் றெரியேன்
    யாவனாயினு மாக மற்றென்
    காவ னெஞ்சங் கட்டழித் தனனென
    வெஞ்சின விடலையொடு நெஞ்சுமா றாடி
    உலைப்பருந் தானை யுதயண குமரற்
    கிலைக்கொழுந்து குயின்ற வெழில்வளைப் பணைத்தோள்
    உரிய வாயின வுணர்மி னென்றுதன்
    அரிமதர் நெடுங்க ணயனின் றோர்க்கும்
    அறியக் கூறுத ல

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:55:11(இந்திய நேரம்)