Primary tabs
-
பெருங்கதைஉ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
கொய்மலர்க் கண்ணி கொடுப்போள் போலக்
கனவிற் றோன்றக் கண்படை யின்றி
நனவிற் றோன்றிய நறுநுதற் சீறடி
மைவளர் கண்ணியை யெய்தும் வாயில்
யாதுகொ லென்றுதன் னகத்தே நினைஇ
வெங்கனன் மீமிசை வைத்த வெண்ணெயின்
நெஞ்ச முருக நிறுத்த லாற்றான்
காவினுட் காவலன் கலங்கக் கோயிலுட்
பாசிழை யல்குற் பாவையும் புலம்பித்
தாயில் கன்றி னாய்நலந் தொலைஇப்
புகையினுஞ் சாந்தினுந் தகையிதழ் மலரினும்
வாசங் கலந்த மாசி றிருமனை
ஆயஞ் சூழ வமளியு ளேறி
நறுமலர்க் காவினுட் டுறுமிய பூந்துணர்க்
கொடிக்குருக் கத்திக் கொழுந்தளிர் பிடித்து
நாண்மலர்ப் புன்னைத் தாண்முத லணைந்து
பருகு வன்ன நோக்கமொடு பையாந்
துருகு முள்ளமோ டொருமர னொடுங்கி
நின்றோன் போலவு மென்றோள் பற்றி
அகலத் தொடுக்கி நுகர்வோன் போலவும்
அரிமலர் நெடுங்க ணகவயிற் போகாப்
புரிநூன் மார்பன் புண்ணிய நறுந்தோள்
தீண்டும் வாயில் யாதுகொ லென்றுதன்
மாண்ட சூழ்ச்சி மனத்தே மறுகி
ஆசி லணியிழை தீயயல் வைத்த
மெழுகுசெய் பாவையி னுருகு நெஞ்சினள்
பள்ளி கொள்ளா ளுள்ளுபு வதிய
இருவயி னொத்த வியற்கை நோக்கமொ
டொருவயி னொத்த வுள்ள நோயர்
மல்லற் றானை வத்தவர் மன்னனும்
செல்வப் பாவையுஞ் செய்திற மறியார்
கொல்வது போலுங் குறிப்பிற் றாகி
எல்லி யாம மேழிருள் போலப்
பசுங்கதிர்த் திங்கள் விசும்பளந் தோடிக்
கடுங்கதிர்க் கனலி கக்குபு போகித்
தானொளி மழுங்கி மேன்மலை குளிப்ப