தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   269


     

    கொய்மலர்க் கண்ணி கொடுப்போள் போலக்
    கனவிற் றோன்றக் கண்படை யின்றி
    நனவிற் றோன்றிய நறுநுதற் சீறடி
    மைவளர் கண்ணியை யெய்தும் வாயில்
    யாதுகொ லென்றுதன் னகத்தே நினைஇ
    வெங்கனன் மீமிசை வைத்த வெண்ணெயின்
    நெஞ்ச முருக நிறுத்த லாற்றான்
    காவினுட் காவலன் கலங்கக் கோயிலுட்
    பாசிழை யல்குற் பாவையும் புலம்பித்
    தாயில் கன்றி னாய்நலந் தொலைஇப்
    புகையினுஞ் சாந்தினுந் தகையிதழ் மலரினும்
    வாசங் கலந்த மாசி றிருமனை
    ஆயஞ் சூழ வமளியு ளேறி
    நறுமலர்க் காவினுட் டுறுமிய பூந்துணர்க்
    கொடிக்குருக் கத்திக் கொழுந்தளிர் பிடித்து
    நாண்மலர்ப் புன்னைத் தாண்முத லணைந்து
    பருகு வன்ன நோக்கமொடு பையாந்
    துருகு முள்ளமோ டொருமர னொடுங்கி
    நின்றோன் போலவு மென்றோள் பற்றி
    அகலத் தொடுக்கி நுகர்வோன் போலவும்
    அரிமலர் நெடுங்க ணகவயிற் போகாப்
    புரிநூன் மார்பன் புண்ணிய நறுந்தோள்
    தீண்டும் வாயில் யாதுகொ லென்றுதன்
    மாண்ட சூழ்ச்சி மனத்தே மறுகி
    ஆசி லணியிழை தீயயல் வைத்த
    மெழுகுசெய் பாவையி னுருகு நெஞ்சினள்
    பள்ளி கொள்ளா ளுள்ளுபு வதிய
    இருவயி னொத்த வியற்கை நோக்கமொ
    டொருவயி னொத்த வுள்ள நோயர்
    மல்லற் றானை வத்தவர் மன்னனும்
    செல்வப் பாவையுஞ் செய்திற மறியார்
    கொல்வது போலுங் குறிப்பிற் றாகி
    எல்லி யாம மேழிருள் போலப்
    பசுங்கதிர்த் திங்கள் விசும்பளந் தோடிக்
    கடுங்கதிர்க் கனலி கக்குபு போகித்
    தானொளி மழுங்கி மேன்மலை குளிப்ப

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:56:24(இந்திய நேரம்)