தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   268


     

    லமரக்
    கழனி யாரல் கவுளகத் தடக்கிப்
    பழன மருதிற் பார்ப்புவாய் சொரிந்து
    கருங்கா னாரை நரன்றுவந் திறுப்பத்
    துணைபிரி மகளி ரிணைமலர் நெடுங்கண்
    கட்டழன் முத்தங் காலப் பட்டுடைத்
    தனிக்கா ழல்குற் பனிப்பசப் பிவர
    அழல்புரை வெம்பனி யளைஇ வாடை
    உழல்புகொண் டறாஅ தொல்லென் றூர்தரச்
    செங்கேழ் வானக் கம்பலம் புதைஇ
    வெங்க ணீர தாகி வேலிற்
    புன்கண் மாலை போழத் தன்கண்
    தீராக் கற்பிற் றேவியை மறந்து
    பேராக் கழற்காற் பெருந்தகை புலம்பிப்
    பைவிரி யல்குற் பதுமா பதிவயிற்
    கைவரை நில்லாக் காம வேகம்
    அன்றுமுத லாகச் சென்றுமுறை நெருங்கப்
    பவழமு மணியும் பாங்குபட விரீஇத்
    திகழ்கதிர்ப் பசும்பொற் சித்திரச் செய்கை
    வனப்பமை வையந் தனக்குமறை யாகிய
    கஞ்சிகை கடுவளி யெடுப்ப மஞ்சிடை
    வானர மகளிரிற் றானணி சுடர
    முகைநலக் காந்தண் முகிழ்விர னோவத்
    தகைமலர்ப் பொய்கைத் தண்செங் கழுநீர்
    சில்லெனப் பிடித்து மெல்லென விழிந்து
    நண்ண வருவோள் போலு மென்கண்
    ஆற்றே னவட னஞ்சாந் திளமுலை
    நோற்றே யாயினு நுகர்வல் யானெனத்
    தெய்வ நல்யாழ் கையமைத் தியற்றிய
    ஐதேந் தல்கு லவந்திகை வீவும்
    உறுதுணைத் தோழ னிறுதியு நினையான்
    மாண்ட சூழ்ச்சி மந்திர வமைச்சர்
    வேண்டுங் கொள்கைய னாகி நீண்ட
    தடம்பெருங் கண்ணி தகைபா ராட்டி
    உறுவகை யண்ண றறுகண் பொருந்தலும்
    கைவயிற் கொண்ட கழுநீர் நறும்போது

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:56:12(இந்திய நேரம்)