தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Soolamani Malai

  • ஓலை எண் : 

  • சூளாமணி மாலை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   106

    க ளுடைந்தார்.
     
    459.
    நாம நூற்கலை விச்சையி னன்னெறி யிவைதாம்
    தாம நீள்குழற் றளர்நடை யுருவுகொண் டனையார்
    வாம மேகலை மடவர லிவர்களை வளர்த்தார்
    காம நூலினுக் கிலக்கியங் காட்டிய வளத்தார்.
     
    460.
    இனிய வீங்கிய விளமுலை யிவர்களை வளர்த்தார்
    பனியின் மென்மல ரலர்ந்தன வுவகையிற் பயில்வார்
    கனிப வேலிவர் கடல்விளை யமிழ்தெனக் கனிவார்
    முனிப வேலிவ ரனங்கனைம் படைதொட முனிவார்.
     
    461.
    புலவி தானுமோர் கலவியை விளைப்பதோர் புலவி
    கலவி தானுமோர் புலவியை விளைப்பதோர் கலவி
    குலவு வார்சிலை மதனனைங் கணையொடு குலவி
    இலவு வாயுடை யிளையவ ருடையன விவையே.
     
    462.
    மன்னு வார்சிலை மதனனோர் வடிவுகொண் டிலாதான்
    தன்னை நாமுமோர் தகைமையிற் றணத்துமென் றிருப்பார்
    என்னை பாவமிங் கிவர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 00:10:41(இந்திய நேரம்)