தமிழ் மண்டபம்

தமிழ் மண்டபம்

பாடம்
Lesson


காட்சி - 2

இடம் : கரிகாலன் மாளிகை
பங்கேற்போர் : கடியலூர் உருத்திரங் கண்ணனார், கரிகாலன் மற்றும் பலர்

 
வீரர் : மன்னர் கரிகாலன் வாழ்க!
மக்கள் : வாழ்க! வாழ்க!
(மன்னர் வருகிறார்)
கரிகாலன் : வணக்கம்!
எல்லாருக்கும் வணக்கம்!
வீரர் : மன்னா! தமிழ்ப் புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் வந்துள்ளார்.
கரிகாலன் : அப்படியா! நன்று! வரச்சொல்.
(புலவர் வருகிறார்)
புலவர் : மன்னா வணக்கம்! வாழ்க நீ!
கரிகாலன் : வாழ்த்துக்கு நன்றி புலவரே!

தங்கள் வருகைக்கு நன்றி புலவரே!
புலவர் : மன்னா! பட்டினப்பாலை என்று ஒரு நூல் எழுதி உள்ளேன்.
கரிகாலன் : அப்படியா!.....

அதில் நீங்கள் சொல்ல வருவது என்ன புலவரே!
புலவர் : இந்த நூலில், சோழநாடு, காவிரி ஆறு, அது கடலில் கலக்கும் இடம், போன்ற பலவற்றைப் பற்றிச் சொல்லி உள்ளேன் மன்னா! இதற்குக் காரணமான உன் சிறப்பும் அதில் உள்ளது மன்னா!
கரிகாலன் : நன்றி புலவரே !

நன்றி! நீங்கள் எழுதிய பாடலைப் படியுங்கள் கேட்போம்.
புலவர் : வசை இல் புகழ், வயங்கு வெண்மீன்
திசை மாறித் தெற்கு ஏகினும்
வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத்தலைய கடல் காவிரி
புனல்பரந்து பொன் கொழிக்கும்
....................................................
(புலவர் பாடிக் கொண்டே இருக்கிறார்)
மக்கள் : ஆ! அருமை! அருமை!
கரிகாலன் : சிறப்பான கருத்துகள்!

வாழ்க புலவரே! வாழ்க புலவரே!
புலவர் : உன் வாழ்த்திற்கு நன்றி மன்னா!

நன்றி!
கரிகாலன் : புலவரே! இதோ பரிசு;

நூறு ஆயிரம் பொன்! ஒரு நூறு ஆயிரம் இல்லை

பதினாறு நூறாயிரம் பொன்!

அதோடு பதினாறு கால் மண்டபம் ஒன்று! வாழ்க புலவரே!
புலவர் : நன்றி! நன்றி! மன்னா நன்றி!

மக்களே நன்றி!
வீரர் : மன்னன் வாழ்க !
மக்கள் : வாழ்க! வாழ்க!
வீரர் : புலவர் வாழ்க!
மக்கள் : வாழ்க! வாழ்க!