தமிழ் மண்டபம்
பாடம்
Lesson
இடம் | : பதினாறுகால் மண்டபம் |
பங்கேற்போர் | : போர் வீரர்கள், ஆசிரியர், மாணவர் |
மக்கள் | : ஐயா! ஐயா! |
ஆசிரியர் | : என்ன! என்ன! ஏன் ஓடி வருகிறீர்கள்? |
மக்கள் | : ஐயா! நம் நாடு ! நம் வீடு! நம் மண்டபம்!........ |
ஆசிரியர் | : என்ன! என்ன! |
மக்கள் | : நம் நாடு போய்விட்டது போரில் நம் நாடு போய்விட்டது ஐயா! ஐயா! பாண்டிய மன்னன் நம் நாட்டை எடுத்துக்கொண்டான் ஐயா! |
ஆசிரியர் | : ஆ!........ |
மாணவர்கள் | : ஆ! ஐயோ! ஐயோ! ஐயா! விட மாட்டோம் மண்டபம், ........... தூண்கள்,......... பதினாறு தூண்கள் இவற்றை இடிக்க விடமாட்டோம். |
(மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறார்கள்)
(பாண்டிய மன்னனின் குதிரைகள், யானைகள், வீரர்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்.)