தமிழ் மண்டபம்
பாடம்
Lesson
இடம் | : பதினாறுகால் மண்டபம் |
பங்கேற்போர் | : பாண்டிய மன்னன், ஆசிரியர், வீரர்கள், மாணவர்கள், மக்கள். |

வீரர் | : மாறவர்மன் சுந்தரபாண்டிய மன்னர் வாழ்க! |
வீரர்கள் | : வாழ்க! வாழ்க! |
பாண்டியன் | : யார் அங்கே? |
வீரர்கள் | : சொல்லுங்கள் மன்னா! |
பாண்டியன் | : இன்னும் இந்த மண்டபம் இடிக்கப்படவில்லையா! |
வீரர்கள் | : இன்னும் சிறிது நேரத்தில்... |
பாண்டியன் | : ஏன்? இவ்வளவு நேரம் ! |
வீரர்கள் | : மன்னா! |
பாண்டியன் | : ம்............ |
வீரர் 1 | : மண்டபத்தை இடிக்க விடாமல் தடுக்கிறார்கள்! |
பாண்டியன் | : யார்? சோழனின் படை வீரர்களா? |
ஆசிரியர் | : மன்னா! வணக்கம் நான் இந்த மண்டபத்தில், தமிழ் சொல்லித் தரும் ஆசிரியர். |
பாண்டியன் | : அப்படியா! வணக்கம். |
ஆசிரியர் | : சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர்கள் நீங்கள்! |
பாண்டியன் | : சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர்கள் நீங்கள்! |
பாண்டியன் | : நன்று! நன்று!! |
ஆசிரியர் | : தமிழ்ப்பள்ளி நடந்து வரும் இந்த மண்டபத்தை நீங்கள் இடிக்கலாமா? கரிகால் மன்னன் தமிழுக்குக் கட்டிய மண்டபத்தை இடிக்கலாமா? கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்ற புலவர் புகழ் சொல்லும் இந்த மண்டபத்தை இடிக்கலாமா? |
பாண்டியன் | : ஆசிரியரே இது தமிழ் மண்டபமா! ஐயோ! இதை நான் இடிக்க நினைத்தேனே! வீரர்களே! திரும்பிப் போங்கள்! மண்டபத்தை இடிக்க வேண்டாம்! |
ஆசிரியர் | : நன்றி மன்னா! நன்றி பாண்டிய மன்னா! கரிகால் மன்னன் சிறப்பையும் உருத்திரங் கண்ணனார் சிறப்பையும் மட்டுமே இதுவரை இந்த மண்டபம் காட்டியது. இனி உன் சிறப்பையும் காட்டும். |
மாணவர்கள் | : தமிழ் வாழ்க! |
மக்கள் | : வாழ்க! வாழ்க! |
மாணவர்கள் | : தமிழ் மண்டபம் காத்த பாண்டிய மன்னன்! |
மக்கள் | : வாழ்க! வாழ்க! |
மாணவர்கள் | : தமிழ் மண்டபம் கட்டிய சோழ மன்னன் கரிகாலன்! |
மக்கள் | : வாழ்க! வாழ்க! |
மாணவர்கள் | : புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்! |
மக்கள் | : வாழ்க! வாழ்க! |
மாணவர் | : ஆசிரியர்! |
மக்கள் | : வாழ்க! வாழ்க! |
மாணவர் | : தமிழ் மண்டபம்! |
மக்கள் | : வாழ்க! வாழ்க! |