தமிழ் மண்டபம்
பாடம்
Lesson
இடம் | : உறையூர் பதினாறு தூண்கள் கொண்ட மண்டபம் |
காலம் | : கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு |
பங்கேற்போர் | : ஆசிரியர், மாணவர்கள் |

மாணவர்கள் | : (நின்றபடி) வணக்கம் ஐயா! |
ஆசிரியர் | : (வந்து கொண்டிருக்கிறார்) வணக்கம் மாணவர்களே! எல்லாரும் அமருங்கள். |
மாணவர்கள் | : (அமர்கிறார்கள்) நன்றி ஐயா! |
ஆசிரியர் | : தம்பி ! இனியன்! நீ எழுந்திரு! வரிசையாக எண்களைச் சொல்லு! |
மாணவர்கள் | : ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து. |
ஆசிரியர் | : நிறுத்து! முல்லை நீ எழுந்திரு! தொடர்ந்து நீ சொல்! |
முல்லை | : பதினொன்று, பன்னிரண்டு, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து, பதினாறு |
ஆசிரியர் | : நிறுத்து முல்லை! கண்ணன் நீ எழுந்திரு! பதினாறு - இந்த எண்ணைச் சொன்னால் உனக்கு என்ன நினைவுக்கு வருகிறது. |
கண்ணன் | : ஐயா! ஐயா! பதினாறு செல்வங்கள் நினைவுக்கு வருகின்றன ஐயா! |
ஆசிரியர் | : நன்று! பதினாறு பேறுகள்! அதில் இரண்டை நீயே சொல்லு! |
கண்ணன் | : கல்வி, புகழ் |
ஆசிரியர் | : நன்று தம்பி! அமர்ந்து கொள். ‘பதினாறு’ இந்த எண்ணைச் சொன்னால் வேறு என்ன நினைவுக்கு வருகிறது? |
செல்வி | : ஐயா! நாம் படிக்கும் பதினாறுகால் மண்டபம் நினைவுக்கு வருகிறது ஐயா! |
ஆசிரியர் | : நன்று! மிக நன்று! |
செல்வி | : ஐயா! ஒரு கேள்வி! |
ஆசிரியர் | : கேள் செல்வி! |
செல்வி | : இந்தப் பதினாறுகால் மண்டபம் எப்போது கட்டப் பட்டது ஐயா! கட்டியவர் யார் ஐயா? |
ஆசிரியர் | : நல்ல கேள்வி அம்மா! நல்ல கேள்வி! இதற்கான பதிலைச் சொல்கிறேன். மணி...... எண்களை நிறுத்தாமல் நீதொடர்ந்து சொல்லி முடி! |
மணி | : பதினாறு, பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது, இருபது........ |
ஆசிரியர் | : (சொல்லத் தொடங்குகிறார்)....... சங்க காலத்தில் கரிகால் பெருவளத்தான் என்ற சோழ மன்னன் இருந்தான். ஆட்சித் திறன், வீரம், கொடை முதலிய எல்லாப் பண்புகளிலும் அவன் சிறந்து இருந்தான். அப்போது ஒரு நாள்..... (காட்சி விரிகிறது) |