முகப்பு |
பலா (பலவு, ஆசினி) |
26. பாலை |
நோகோ யானே; நெகிழ்ந்தன வளையே- |
||
செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை |
||
விண்டுப் புரையும் புணர் நிலை நெடுங் கூட்டுப் |
||
பிண்ட நெல்லின் தாய் மனை ஒழிய, |
||
5 |
சுடர் முழுது எறிப்பத் திரங்கிச் செழுங் காய் |
|
முட முதிர் பலவின் அத்தம், நும்மொடு |
||
கெடு துணை ஆகிய தவறோ?-வை எயிற்று, |
||
பொன் பொதிந்தன்ன சுணங்கின், |
||
இருஞ் சூழ் ஓதி, பெருந் தோளாட்கே. |
உரை | |
தலைவி பிரிவு உணர்ந்து வேறுபட்டமை சொல்லி, தோழி செலவு அழுங்குவித்தது.-சாத்தந்தையார்
|
44. குறிஞ்சி |
பொரு இல் ஆயமோடு அருவி ஆடி, |
||
நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக் கண் |
||
குறியா நோக்கமொடு முறுவல் நல்கி, |
||
மனைவயின் பெயர்ந்த காலை, நினைஇய |
||
5 |
நினக்கோ அறியுநள்-நெஞ்சே! புனத்த |
|
நீடு இலை விளை தினைக் கொடுங் கால் நிமிரக் |
||
கொழுங் குரல் கோடல் கண்ணி, செழும் பல, |
||
பல் கிளைக் குறவர் அல்கு அயர் முன்றில், |
||
குடக் காய் ஆசினிப் படப்பை நீடிய |
||
10 |
பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்து, |
|
செல் மழை இயக்கம் காணும் |
||
நல் மலை நாடன் காதல் மகளே? |
உரை | |
இற்செறிப்பின்பிற்றைஞான்று தலைமகன் குறியிடத்து வந்து சொல்லியது.-பெருங்கௌசிகனார்
|
51. குறிஞ்சி |
யாங்குச் செய்வாம்கொல்-தோழி! ஓங்கு கழைக் |
||
காம்புடை விடர் அகம் சிலம்ப, பாம்பு உடன்று |
||
ஓங்கு வரை மிளிர ஆட்டி, வீங்கு செலல் |
||
கடுங் குரல் ஏறொடு கனை துளி தலைஇப் |
||
5 |
பெயல் ஆனாதே, வானம்; பெயலொடு |
|
மின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தென, |
||
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே; |
||
பெருந் தண் குளவி குழைத்த பா அடி, |
||
இருஞ் சேறு ஆடிய நுதல, கொல்களிறு |
||
10 |
பேதை ஆசினி ஒசித்த |
|
வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே? |
உரை | |
ஆற்றாது ஏதம் அஞ்சி வேறுபட்டாள், வெறியாடலுற்ற இடத்து, சிறைப்புறமாகச்சொல்லியது.-பேராலவாயர்
|
77. குறிஞ்சி |
மலையன் மா ஊர்ந்து போகி, புலையன் |
||
பெருந் துடி கறங்கப் பிற புலம் புக்கு, அவர் |
||
அருங் குறும்பு எருக்கி, அயா உயிர்த்தாஅங்கு |
||
உய்த்தன்றுமன்னே-நெஞ்சே!-செவ் வேர்ச் |
||
5 |
சினைதொறும் தூங்கும் பயம் கெழு பலவின் |
|
சுளையுடை முன்றில், மனையோள் கங்குல் |
||
ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும் |
||
ஊறலஞ் சேரிச் சீறூர், வல்லோன் |
||
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை |
||
10 |
அகன் தொடி செறித்த முன்கை, ஒள் நுதல், |
|
திதலை அல்குல், குறுமகள் |
||
குவளை உண்கண் மகிழ் மட நோக்கே. |
உரை | |
பின்னின்ற தலைவன்நெஞ்சிற்கு உரைத்தது.-கபிலர்
|
102. குறிஞ்சி |
கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப்பைங் கிளி! |
||
அஞ்சல் ஓம்பி, ஆர் பதம் கொண்டு, |
||
நின் குறை முடித்த பின்றை, என் குறை |
||
செய்தல்வேண்டுமால்; கை தொழுது இரப்பல்; |
||
5 |
பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டு, |
|
நின் கிளை மருங்கின், சேறிஆயின், |
||
அம் மலை கிழவோற்கு உரைமதி-இம் மலைக் |
||
கானக் குறவர் மட மகள் |
||
ஏனல் காவல் ஆயினள் எனவே. |
உரை | |
காமம் மிக்க கழிபடர்கிளவி.-செம்பியனார்
|
116. குறிஞ்சி |
'தீமை கண்டோர் திறத்தும்பெரியோர் |
||
தாம் அறிந்து உணர்க' என்பமாதோ; |
||
வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று, |
||
இரு வெதிர் ஈன்ற வேல் தலைக் கொழு முளை, |
||
5 |
சூல் முதிர் மடப் பிடி, நாள் மேயல் ஆரும் |
|
மலை கெழு நாடன் கேண்மை, பலவின் |
||
மாச் சினை துறந்த கோள் முதிர் பெரும் பழம் |
||
விடர் அளை வீழ்ந்து உக்காஅங்கு, தொடர்பு அறச் |
||
சேணும் சென்று உக்கன்றே அறியாது |
||
10 |
ஏ கல் அடுக்கத்து இருள் முகை இருந்த |
|
குறிஞ்சி நல் ஊர்ப் பெண்டிர் |
||
இன்னும் ஓவார், என் திறத்து அலரே! |
உரை | |
வரைவு நீட்டிப்ப ஆற்றாளாய தலைவி தோழிக்கு வன்புறை எதிரழிந்து சொல்லியது.-கந்தரத்தனார்
|
192. குறிஞ்சி |
'குருதி வேட்கை உரு கெழு வய மான் |
||
வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும் |
||
மரம் பயில் சோலை மலிய, பூழியர் |
||
உருவத் துருவின், நாள் மேயல் ஆரும் |
||
5 |
மாரி எண்கின் மலைச் சுர நீள் இடை, |
|
நீ நயந்து வருதல் எவன்?' எனப் பல புலந்து, |
||
அழுதனை உறையும் அம் மா அரிவை! |
||
பயம் கெழு பலவின் கொல்லிக் குட வரைப் |
||
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை |
||
10 |
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன, நின் |
|
ஆய் நலம் உள்ளி வரின், எமக்கு |
||
ஏமம் ஆகும், மலைமுதல் ஆறே. |
உரை | |
இரவுக்குறி மறுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.
|
213. குறிஞ்சி |
அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி, |
||
'கன்று கால்யாத்த மன்றப் பலவின் |
||
வேர்க் கொண்டு தூங்கும் கொழுஞ் சுளைப் பெரும் பழம் |
||
குழவிச் சேதா மாந்தி, அயலது |
||
5 |
வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும் |
|
பெருங் கல் வேலிச் சிறுகுடி யாது?' என, |
||
சொல்லவும் சொல்லீர்; ஆயின், கல்லென |
||
கருவி மா மழை வீழ்ந்தென, எழுந்த |
||
செங் கேழ் ஆடிய செழுங் குரற் சிறு தினைக் |
||
10 |
கொய் புனம் காவலும் நுமதோ?- |
|
கோடு ஏந்து அல்குல், நீள் தோளீரே! |
உரை | |
மதி உடன்படுக்கும் தலைமகன் சொல்லியது.-கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்
|
222. குறிஞ்சி |
கருங் கால் வேங்கைச் செவ் வீவாங்கு சினை |
||
வடுக் கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக் |
||
கை புனை சிறு நெறி வாங்கி, பையென, |
||
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப, யான் இன்று, |
||
5 |
பசுங் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கிச் |
|
செலவுடன் விடுகோ-தோழி!-பலவுடன் |
||
வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில், |
||
துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட, காணாது, |
||
பெருங் களிறு பிளிறும் சோலை அவர் |
||
10 |
சேண் நெடுங் குன்றம் காணிய நீயே? |
உரை |
தோழி, தலைமகன் வரவு உணர்ந்து, சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.-கபிலர்
|
232. குறிஞ்சி |
சிறு கண் யானைப் பெருங் கை ஈர்-இனம் |
||
குளவித் தண் கயம் குழையத் தீண்டி, |
||
சோலை வாழை முணைஇ, அயலது |
||
வேரல் வேலிச் சிறுகுடி அலற, |
||
5 |
செங் காற் பலவின் தீம் பழம் மிசையும் |
|
மா மலை நாட!-காமம் நல்கென |
||
வேண்டுதும்-வாழிய! எந்தை, வேங்கை |
||
வீ உக வரிந்த முன்றில், |
||
கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே. | உரை | |
பகல் வருவானை இரவு வா எனத் தோழி சொல்லியது.-முதுவெங்கண்ணனார்
|
326. குறிஞ்சி |
கொழுஞ் சுளைப் பலவின் பயம் கெழு கவாஅன், |
||
செழுங் கோள் வாங்கிய மாச் சினைக் கொக்கினம் |
||
மீன் குடை நாற்றம் தாங்கல்செல்லாது, |
||
துய்த் தலை மந்தி தும்மும் நாட! |
||
5 |
நினக்கும் உரைத்தல் நாணுவல்-இவட்கே |
|
நுண் கொடிப் பீரத்து ஊழ் உறு பூ எனப் |
||
பசலை ஊரும் அன்னோ; பல் நாள் |
||
அரி அமர் வனப்பின் எம் கானம் நண்ண, |
||
வண்டு எனும் உணராவாகி, |
||
10 |
மலர் என மரீஇ வரூஉம், இவள் கண்ணே. | உரை |
தோழி, தலைமகனை வரைவுகடாயது.-மதுரை மருதன் இளநாகனார்
|
353. குறிஞ்சி |
ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த |
||
நுணங்கு நுண் பனுவல் போல, கணம் கொள, |
||
ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை, |
||
முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் |
||
5 |
கல் கெழு குறவர் காதல் மடமகள் |
|
கரு விரல் மந்திக்கு வரு விருந்து அயரும், |
||
வான் தோய் வெற்ப! சான்றோய்அல்லை-எம் |
||
இரும் புலி தொலைத்த பெருங் கை யானை |
||
10 |
வெஞ் சின உருமின் உரறும் |
|
அஞ்சுவரு சிறு நெறி வருதலானே. | உரை | |
தோழி ஆற்றது அருமை அஞ்சி, தான் ஆற்றாளாய்ச் சொல்லியது.- கபிலர்
|
373. குறிஞ்சி |
முன்றிற் பலவின் படு சுளை மரீஇ, |
||
புன் தலை மந்தி தூர்ப்ப, தந்தை |
||
மை படு மால் வரை பாடினள் கொடிச்சி, |
||
ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு |
||
5 |
சூருடைச் சிலம்பின் அருவி ஆடி, |
|
கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கைப் |
||
பா அமை இதணம் ஏறி, பாசினம் |
||
வணர் குரற் சிறு தினை கடிய, |
||
புணர்வதுகொல்லோ, நாளையும் நமக்கே? | உரை | |
செறிப்பு அறிவுறீஇயது.-கபிலர்
|