Primary tabs
4.6 தொகுப்புரை
இப்பாடத்தின் மூலம் அயலகத் தொடர்பால் தமிழகத்தில் எவ்வாறு எல்லாம் மாற்றங்கள் நடைபெற்றன என்பதைப் படித்து அறிந்திருப்பீர்கள்.
தமிழர்கள் மேலை நாட்டாருடன் வாணிபத்தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு செழிப்பாக வாழ்ந்தது பற்றிப் படித்திருப்பீர்கள்.
பண்டைய தமிழர்கள் கீழை நாட்டாருடனும் வாணிபத் தொடர்பு கொண்டிருந்ததைப் படித்து உணர்ந்தீர்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக வட இந்தியருடன் கொண்ட வாணிபத் தொடர்பால் ஆரியர் தமிழகத்துள் நுழைந்ததும், அவர்களால் மொழியிலும், இலக்கியத்திலும், சமூக வாழ்விலும், சமயக் கோட்பாட்டிலும் சொல்ல முடியாத அளவிற்கு மாற்றங்கள் ஏற்பட்டன என்பது பற்றியும் நன்கு படித்து அறிந்திருப்பீர்கள்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II