தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 3.6 தொகுப்புரை

    பல்லவ மன்னர்களின் தீவிரச் சமயப் பற்றும், கோயில் பணியும், கொடைகளும், மக்கள் அடியவரை ஆதரிக்கத் தூண்டின. சைவ, வைணவ இலக்கியங்கள் உருப்பெற்றன. அவை மக்களால் படிக்கப்பட்டன; கோயில், கூட்டுவழிபாடுகளில் பாடப்பட்டன. சமண சமயத்தில் பெருங்கதை எனும் மொழிபெயர்ப்பு நூலும், மேரு மந்தர புராணம் எனும் புராண நூலும் மட்டுமே இக்காலத்து எழுந்தன. முத்தரையரைப் புகழும் தனிப்பாடல்கள் கிடைத்துள்ளன. உரைநூல், அகப்பொருள் நூல் போன்ற பிற நூல்களும் தோன்றின.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.

    திருப்பல்லாண்டைப் பாடியவர் யார்?

    2.

    பெரியாழ்வார் பெற்ற பெண் கொடி யார்? அவர் பாடிய நூல்கள் யாவை?

    3.

    திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரங்களின் பெயர்கள் யாவை?

    4.

    எட்டாம் நூற்றாண்டில் தோன்றிய சமண சமய நூல்கள் எவை?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 29-07-2017 12:05:22(இந்திய நேரம்)