Primary tabs
-
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
நாட்டுப்புறவியல் என்ற இலக்கிய வடிவம் தமிழகத்தில் எங்ஙனம் விளங்கியது என்பதைக் கூறுவது இப்பாடம். இதில் இந்த இலக்கியத்தின் வகைகள், அவற்றின் தோற்றம், வளர்ச்சி என்ற முறையில் கருத்துகளைக் கூறும் பொழுது வரலாறு என்பது தெளிவாகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.
நாட்டுப்புறவியல் இலக்கியத்தின் சிறப்பினைத் தெரிந்து கொள்ள முடியும்.இலக்கியத்தின் நிலைத்த தன்மைக்கு அதன் தோற்றமும் வளர்ச்சியும் முக்கியமானவை. இதனை இப்பாடம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.உலகளாவிய நிலையில் தமிழக நாட்டுப்புறவியலின் இடம் எத்தகைய நிலையில் உள்ளது என்பதை இதனைப் படித்தால் புரிந்து கொள்ள முடியும்.