தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Bharathiyar Kavithai Ulagam-பாரதியாரின் முப்பெரும் பாடல்கள்

  • பாடம் - 4

    C01114  பாரதியாரின் முப்பெரும் பாடல்கள்

     

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?  

    பாரதியாரின் கவிதை ஆக்கங்களில் அளவில் நீண்டு கிடைப்பவை மூன்று; கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம். அவை பாரதியாரின் ‘முப்பெரும்பாடல்கள்’ எனப் போற்றப்படுபவை. இப்பாடத்தில் முப்பெரும்பாடல்கள் எழுதப்பெற்ற பின்புலம், நோக்கம், பாடல்களின் உள்ளுறை பொருள், சிறப்பு ஆகியவை விளக்கப்படுகின்றன.

     

    இப்பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?    

    இப்பாடத்தை முறையாகப் படித்து, அதில் உள்ள கற்றல் செய்கைகளை மேற்கொள்பவர் கீழ்க்காணும் திறன்களை / பயன்களைப் பெறுவர்:

    •  
    பாரதியின் புதுவை வாசத்திற்கான அரசியல் பின்புலத்தையும், புதுவை வாசத்தின்போது பாரதி ஆற்றிய இலக்கியப் பணியினையும் விவரிக்க இயலும்.
    •  
    சமகாலச் சமுதாயத்தின் இழிவுகளைத் தம் மக்களுக்கு உணர்த்த 'பாஞ்சாலி சபதம்’ என்ற படைப்பின் வழியாகப் பாரதி எடுத்த முயற்சிகளை இனங்காண இயலும்.
    •  
    பாரதியின் தெய்வீகச் சிந்தனை வழக்கமான வழிபாட்டுச் சிந்தனையினின்றும் விலகி, வாழ்க்கைக்குப் பயன்தரும் வகையில் விளங்குவதை அடையாளங்காட்ட இயலும்.
    •  
    பாரதியின் சித்தாந்தக் கோட்பாடுகள் குயில்பாட்டுக் கதையில் உள்ளுறைப் பொருளாக அமைந்திருப்பதை எடுத்துக் காட்ட இயலும்

     

    பாடஅமைப்பு

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:56:54(இந்திய நேரம்)