Primary tabs
-
4.6 தொகுப்புரை
கவிஞன் கடந்த கால இலக்கியப் படைப்பு நெறியிலேயே போவதை விட்டுப் புதிய நெறிகளில் முயலும் போது, மொழிக்குப் புதிய உத்திகளும் படைப்புகளும் கிடைக்கின்றன. பழைய செய்திகளை நிகழ்காலத் தேவைகளை ஒட்டி மறுவார்ப்புச் செய்வதற்குக் கவிஞனுக்குப் பேராற்றல் வேண்டும். பாரதியிடம் அப்பேராற்றல் இருந்ததனை முப்பெரும் பாடல்கள் காட்டுகின்றன.