Primary tabs
-
5.7 தொகுப்புரை
தமிழ்ப் பண்பாட்டில் உயிர்ப்புள்ள ஒருபகுதி கிராமமேயாகும். தமிழர் பண்பாட்டை மறுபடியும் படம் பிடித்துக் காட்ட வேண்டுமென்று கருதுபவர்கள் இன்றும் கிராமத்திற்கே செல்லவேண்டும். இன்று எந்த நகரக் கலப்பும் இல்லாமல் கிராமத்து மனிதனே ஓர் அசலான தமிழனாகக் காட்சி தருகிறான்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1. நகரப் பண்பாட்டின் அடையாளங்கள் இரண்டைக் கூறுக.
2. சிற்றூர்ப் பண்பாட்டைக் காப்பாற்றி வருபவர் யார்?
3. கிராமத்தில் இருப்பவன் வரலாற்று ஆசிரியனாகத் திகழ்வதைக் காட்டுக.
4. கிராம ஓவியம் எனக் கூறப்பெறும் பழக்கங்கள் சிலவற்றைக் கூறுக.
5. கிராமச் சடங்குகள் இரண்டினைக் குறிப்பிடுக.